Bhakkiyalakshmi: கோபி வச்ச ஆப்பு பாக்கியாவுக்கு இல்ல ராதிகாவுக்கு.. ஈஸ்வரி ஆட்டம் இனி ஆரம்பம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்கியாக்கு கொடுக்கும் தண்டனை என்று நினைத்து ஈஸ்வரியை தன்னுடன் அழைத்து வந்து விட்டார். ஈஸ்வரி வந்தது பிடிக்கவில்லை என்றாலும் கோபிக்காக ராதிகா அட்ஜஸ்ட் பண்ணி இருக்கிறார். ஆனால் ராதிகாவின் அம்மா, ஈஸ்வரி இன்னும் இரண்டு நாளில் துண்ட காணோம் துணிய காணும் என்று ஓட வைக்கிறேன் என்று சவால் விட்டிருக்கிறார்.

அதன்படி இந்த இரண்டு பாட்டிகளுக்கும் இடையே இனி ஒவ்வொரு நாளும் போர்க்களமாக தான் இருக்கப் போகிறது. ஆனால் இவர்களுக்கு இடையில் கோபி மற்றும் ராதிகா மாட்டிக்கொண்டு முழிக்க போகிறார்கள். அதாவது இது என்னுடைய மகன் வீடு என்று ஈஸ்வரி ஓவராக அராஜகம் பண்ணுகிறார். சும்மாவே ஈஸ்வரி பாக்கியாவை குறை சொல்லிக் கொண்டிருப்பார்.

ஓவராக அராஜகம் பண்ணும் ஈஸ்வரி

அப்படிப்பட்டவர் ராதிகாவை மட்டும் சும்மாவா விட்டு வைப்பார். அவஸ்தைப்படும் அளவிற்கு ராதிகாவிற்கு ஓவர் டார்ச்சர் கொடுக்கிறார். போதாததற்கு ராதிகாவின் அம்மாவையும் விட்டு வைப்பதாக இல்லை. அதிலும் தனக்கு தனி ரூம் வேண்டும் என்று மீதமிருக்க ஒரு ரூமை எடுத்துக் கொண்டார். இதனால் ராதிகாவின் அம்மா தூங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி ஜம்பமாக கால் மேல் கால போட்டு உட்கார்ந்து ராதிகாவையும் அவருடைய அம்மாவையும் வேலைக்காரி போல் வேலை வாங்குகிறார். கோபி இடம் தனக்கு எதுவுமே இவர்கள் தர மாட்டார்கள் என்று கம்ப்ளைன்ட் பண்ணி ஓவர் சென்டிமென்ட் காட்டுகிறார். இதை பார்த்த கோபி, ராதிகாவிடம் அம்மாவுக்கு தேவையான அனைத்தையும் நீ தான் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு கோபி போனதும் ராதிகாவையும் அவருடைய அம்மாவையும் வச்சு செய்கிறார். இங்கே ஈஸ்வரி படுத்துற பாட்டை தாங்க முடியாமல் கோபிக்கு டார்ச்சர் கொடுக்கப் போகிறார் ராதிகா. பாக்யாவிடம் இருந்து அம்மாவை பிரித்துக் கொண்டு வந்தால் ரொம்பவே கஷ்டப்படுவார் என்று பாக்யாவுக்கு ஆப்பு வைக்கலாம் என நினைத்த கோபி கடைசியில் அவருக்கே ஆப்பாக முடிந்து விட்டது.

இனி தான் ஈஸ்வரியின் ஆட்டம் ஆரம்பம் என்பதற்கு எல்லாத்தையும் ஆட்டி படைக்கப் போகிறார். அத்துடன் ராதிகா அம்மாவும் எந்த விதத்திலும் குறைஞ்சவங்க இல்ல என்று சொல்லுவதற்கு ஏற்ப ஈஸ்வரி இவரிடம் மாட்டிக் கொண்டு சின்னா பின்னமாக போகிறார். கடைசியில் பாக்கியாவின் அருமை புரிந்துகொண்டு பாக்கியாவிடம் தஞ்சமடைய போகிறார்.

Next Story

- Advertisement -