Bhakkiyalakhsmi: கோபிக்கு கெடு வைத்த சக்காளத்தி குடும்பம்.. தலதெறித்து பாக்கியா வீட்டுக்கு ஓட போகும் பரிதாபம்

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாக்கு செஞ்ச துரோகத்துக்கு கோபி தற்போது தண்டனை அனுபவிக்கும் வகையில் அவஸ்தை பட்டு வருகிறார். அதாவது ரெண்டு மத்தளத்துக்கு இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்றே சொல்லலாம். ஒரு பக்கம் அம்மாவை ராதிகா வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் ராதிகாவின் அம்மா இருப்பதால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நிலவுகிறது. இதில் யாருக்கு சாதகமாக நின்னு பேச முடியும் என்று தெரியாமல் ராதிகா, கோபியிடம் இன்னும் இரண்டு நாள் தான் உங்க அம்மாக்கு இங்கு இருக்க டைம். அதுக்குள்ள என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது. இதுக்கு ஒரு வழி பண்ணிவிட்ருங்க என்று சொல்லிவிட்டார்.

அவஸ்தைப்படும் கோபி

அதாவது ஈஸ்வரி வந்ததில் ராதிகாவுக்கும் அவருடைய அம்மாவுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் சகித்துக் கொள்ளலாம் என்று நினைத்த ராதிகாவிற்கு ஈஸ்வரி பண்ணும் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதாவது பாக்கியாவிடம் இருக்கும் பொழுது மாமியார் என்ற தோரணையில் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் பாக்கியா பொறுத்துக் கொண்டார்.

ஆனால் ராதிகாவிற்கு அப்படி ஒரு அவசியமும் இல்லை என்பதால் எப்படியாவது ஈஸ்வரியை இந்த வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார். அந்த வகையில் சாப்பாடு மற்றும் தங்கும் அறை போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளால் வீட்டிற்குள் குழப்பம் வர ஆரம்பித்து விடுகிறது. இதனால் ராதிகாவிற்கும் கோபிக்கும் இடையில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் ஏற்படுகிறது.

போகப் போக இந்த மனஸ்தாபங்கள் இரண்டு பேருக்கும் இடையே வெறுப்பாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தன்னுடைய மகளின் வாழ்க்கையை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்று ராதிகாவின் அம்மாவும் களத்தில் இறங்கி விட்டார். அந்த வகையில் கமுக்கமாக இருந்து கோபியின் அம்மாவுக்கு கொடுக்கும் குடைச்சலால் துண்டை காணோம் துணிய காணோம் என்று தலைதெரித்து ஓட வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்.

பொதுவாக கோபி அம்மாக்கு சொகுசாக இருந்தே பழகிவிட்டது. அதாவது எந்த வேலையும் பார்க்காமல் உட்கார்ந்து இடத்திலேயே சாப்பாடு மாத்திரை என அனைத்து விஷயங்களையும் பாக்கியா செய்து வந்தார். அந்த வகையில் ராதிகா வீட்டில் தாக்கு பிடிக்க முடியாமல் கூடிய சீக்கிரமே ஈஸ்வரி பரிதாபமாக பாக்யா வீட்டிற்கு ஓடிப் போய் விடுவார்.

Next Story

- Advertisement -