விஜய் டிவி காற்றுக்கென்ன வேலி வெண்ணிலாவா இது.? ட்ரான்ஸ்பரண்ட் உடையில் ரசிகர்களை சூடேற்றிய புகைப்படம்

சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் எனும் சீரியல் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா குமார். இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த சீரியல் மலையாள தொடரின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி என்னும் சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தது. இவர் நடித்த அனைத்து சீரியல்களிலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார்.

ஆனால் இவர் சீரியல் நடிப்பதற்கு முன்பு மைசூரில் மாடலிங் துறையில் பணியாற்றி உள்ளார். இதன் மூலம் தான் சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி தான் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். சீரியலில் பொருத்தவரை அவருக்கு பெரும்பாலும் குடும்ப பெண் கதாபாத்திரத்தை கொடுத்து வந்தனர்.

priyanka kumar
priyanka kumar

ஆனால் இவர் மிகவும் மாடர்ன் பெண் என்பது அவரது சமூக வலைதள பக்கத்தில் பார்த்தாலே தெரிந்துவிடும். அந்த அளவிற்கு மார்டன் பெண்ணாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு அடுத்தடுத்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

நடிகைகள் பொறுத்தவரை எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் தற்போது இவர் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் கடற்கரையில் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போதைய இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்