நீங்க விஷம்னு நினைச்சா இவ்வளவு நல்லவங்களா.. ஆச்சரியத்தில் உறைந்து போன தனம்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டுக்குடும்பம், இந்த காலகட்டத்திலும் சாத்தியம் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருப்பதால் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இளையதம்பி கண்ணனுடைய மனைவி ஐஸ்வர்யா, மீனா அடிக்கடி குத்தி காட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தன்னுடைய படிப்பை நிறுத்திவிட்டு கண்ணனுக்காக பாண்டியன் ஸ்டோர் மளிகை கடையில் வேலை பார்க்கிறாள்.

ஆகையால் ஒரு மாதம் முழுவதும் பாண்டியன் சூப்பர் ஸ்டோரில் கடுமையாக வேலை பார்த்த ஐஸ்வர்யா, மூர்த்தியிடம் தனக்கு சம்பளம் வேண்டும் என கேட்கிறாள். இதைக் கேட்டால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் ஐஸ்வர்யா தன்னுடைய கணவன் கண்ணனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காகவே சம்பளம் கேட்கிறார் என்பதை தனம் புரிந்து கொண்டபின் ஐஸ்வர்யாவின் மீது தனி மரியாதையே வந்தது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் எப்பொழுதுமே குட்டையை குழப்பிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா திடீரென்று இப்படி செய்தது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

அத்துடன் கண்ணனும் ஐஸ்வர்யாவிற்காக இறுதியாண்டில் எந்த அறியரும் வைக்க கூடாது என்பதற்காக தன்னுடைய முழு முயற்சியை செலுத்தி நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் முன்பை விட நன்றாகவே படித்து கொண்டிருக்கிறான்.

இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா செய்த இந்த செயல் சோசியல் மீடியாவில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யா நிச்சயம் வேறு ஒரு கடையைத் துவங்கி அதில் முதலாளியாக அமரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால்  அந்த அளவிற்கு பாண்டியன் சூப்பர் ஸ்டோரில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் செய்வதுடன் மிகவும் பொறுப்பாகவும் நடந்து கொள்கிறாள். பொதுவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் முல்லைக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருப்பதை தொடர்ந்து, தற்போது ஐஸ்வர்யாவிற்கும் தனி ரசிகர் கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்