நித்தியை டம்மியாக்கிய ரஞ்சிதா.. பிரதமர் பதவியால் வெடித்த பஞ்சாயத்து

Nithyananda-Ranjitha:  சிறிது காலமாக நித்தியானந்தாவை பற்றிய எந்த செய்திகளும் இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் சோசியல் மீடியாக்களுக்கு தீனி போட்டு இருக்கிறார் இந்த உல்லாச சாமியார். அதிலும் அவருடைய சிஷ்யை ரஞ்சிதாவால் கைலாசாவில் பெரும் பஞ்சாயத்து வெடித்திருப்பது இது என்ன புது கதை என கேட்க வைத்துள்ளது.

பலான வீடியோவால் கடும் எதிர்ப்பலைகளை சந்தித்த நித்தி ஒரு கட்டத்தில் இந்தியாவே வேண்டாம் என்று தனி தீவுக்கு சென்று கைலாசா என்ற புது நாட்டை உருவாக்கினார். அது மட்டுமல்லாமல் அமெரிக்காவுடன் புது ஒப்பந்தம் என வெளிவந்த செய்திகள் ஒவ்வொன்றும் இன்னும் எங்கள பைத்தியக்காரனாவே நினைச்சுகிட்டு இருக்கல்ல என்ற ரேஞ்சில் அமைந்தது.

Also read: இந்த பூனையும் பால் குடிக்குமா.? ஹோம்லி லுக்கில் பலான வேலை பார்த்த நடிகை

இதையெல்லாம் சகித்துக் கொண்ட மக்களால் கைலாசாவின் பிரதமர் ரஞ்சிதா என்பதை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதுக்கெல்லாம் இல்லையா சார் ஒரு எண்டு என பலரும் புலம்பி வந்த நிலையில் அந்த பதவியே இப்போது நித்திக்கு பெரும் பிரச்சனையாக மாறிவிட்டதாம்.

அதாவது ரஞ்சிதா இப்போது குருவையே மிஞ்சிய சிஷ்யையாக மாறிவிட்டாராம். சுருக்கமாக சொல்லப்போனால் நித்தியின் ஒட்டுமொத்த பவரும் இப்போது பிரதமரின் கைக்கு வந்துவிட்டதாம். இதுதான் அங்கு போர்க்கொடி தூக்குவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

Also read: மக்களை சந்திக்காமலே ஆட்சியைப் பிடித்த 3 மாபெரும் தலைவர்கள்.. இப்பவும் செல்வாக்கு குறையாத எம்.ஜி.ஆர்

பணிவிடை செய்த ரஞ்சிதா எப்படி பிரதமராகலாம் என்றும் அவருடைய அட்ராசிட்டி அதிகமாக இருக்கிறது என்றும் அங்கு சலசலப்பு ஏற்பட்டு வருகிறதாம். அதிலும் சிஷ்யர்கள் அனைவரும் இரு பிரிவாக பிரிந்து ஆதரவு எதிர்ப்பு என குழப்பநிலையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதை சமாளிக்க முடியாமல் நித்தியானந்தா இப்போது திணறிக் கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே அவருடைய உடல் நலம் பற்றியும் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றும் பல செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் இப்படி ஒரு விஷயம் கசிந்து இருப்பது சரியான கன்டென்ட் ஆக மாறி உள்ளது.

Also read: நடிகரின் டார்ச்சரால் நித்தியானந்தாவிடம் தஞ்சமடைந்த ரஞ்சிதா.. பூனைக்கு பயந்து புலி இடம் சிக்குவதா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்