ஆனந்தியிடம் ஓவர் நெருக்கம் காட்டும் நந்தா.. அன்பு எடுக்கப் போகும் அதிரடி முடிவு

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் இருந்து சூடு பிடித்திருக்கிறது. அழகன் யார் என்று ஆனந்தி தெரிந்துகொள்ள போகும் தருணத்தை எதிர்பார்த்து நேயர்கள் காத்து கிடக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இந்த ஆனந்திக்கு அறிவே இல்லையா, எதுக்கு இப்படி அன்பை போட்டு பாடாய்படுத்துது என தினமும் திட்டிக் கொண்டே நாடகம் பார்ப்பவர்களும் பலர். நந்தா நான் தான் அழகன் என்று ஆனந்தியுடன் சொன்னது மட்டும் இல்லாமல், ஆனந்தியை நம்ப வைக்க படாத பாடு பட்டு கொண்டிருக்கிறான்.

நந்தா விட மாட்டேன் ஆனந்திக்கு எந்த ஒரு கெட்ட விஷயமும் நடந்து விடக்கூடாது என அன்பு பரிதவித்து போய் இருக்கிறான். இது மட்டும் பத்தாது என்று இன்னொரு பக்கம் ஆனந்தியை எனக்கு கல்யாணம் செய்து கொடுங்கள் என அப்பா அம்மாவிடம் கேட்க மகேஷ் பெரிய திட்டத்தோடு காத்திருக்கிறான்.

இதற்கிடையில் அழகனை பற்றி பேச வரும் அன்பை ஆனந்தி வெறுத்து ஒதுக்குவதோடு, அவன் சொல்ல வரும் எதையுமே கேட்பதாய் இல்லை. நேற்றைய எபிசோடில் அன்பு எவ்வளவு முயற்சி செய்தோம் ஆனந்தி அவன் சொல்ல வருவதற்கு செவி கொடுக்காமல் விரட்டி அடிக்கிறாள்.

ஆனந்தியிடம் ஓவர் நெருக்கம் காட்டும் நந்தா

ஆனந்தி லிப்டில் செல்வதை பார்த்து அவளுடன் நந்தா ஏறி கொள்கிறான். லிப்ட்டும் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. ஆனந்தி லிப்டில் தனியாக இருக்கிறாள், இப்படி பாதியில் நின்று விட்டதே அவள் பயப்பட போகிறாள் என அன்பு ஒரு பக்கம் ஆனந்தியை தேடி அலைகிறான்.

அதே நேரத்தில் வந்தால் லிப்டுக்குள் வைத்து ஆனந்தியிடம் ஐ லவ் யூ என்று சொல்வதோடு, நீயும் திருப்பி இதற்கு பதில் சொல்ல வேண்டும் என வற்புறுத்துகிறான். ஆனால் ஆனந்தி எதுவுமே சொல்லாமல் மௌனமாக இருக்கிறாள்.

இதற்கிடையில் ஆனந்தியை காப்பாற்ற வந்த அன்பை பார்த்து, நந்தா நீ இங்க என்ன பண்ணுற என்று கேட்கிறான். ஆனந்தி தனியா லிப்ட்டில் இருக்கிறாள் என நினைத்து அவளை காப்பாற்ற வந்தேன் என சொல்ல, ஆனந்தியை பார்த்துக்க இனிமே நான் இருக்கிறேன் என்று சொல்லி வில்லத்தனமாக சிரித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறான்.

ஆனந்தி அன்பு மேல் உச்சகட்ட கோபத்தில் இருக்கும்போது நான் தான் அழகன் என்று சொல்லி மொத்தமாய் சொதப்பி விட அன்பிற்கு விருப்பம் இல்லாமல் இருப்பதே இதற்கெல்லாம் காரணம்.

Next Story

- Advertisement -