உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா.? மாயா மாஃபியாவை வச்சு செய்யும் கர்மா

Biggboss 7-Maya: பிக்பாஸ் நிகழ்ச்சி 66 நாட்களை கடந்த நிலையில் இப்போது சூடு பிடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன் தான் மிகப்பெரிய அளவில் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் மாயா மாஃபியா செய்யும் அக்கப்போர் தான்.

ஆரம்பத்தில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு இருந்த மாயா அண்ட் கோ அடுத்தடுத்த நாட்களிலேயே தங்கள் சுயரூபத்தை காட்ட தொடங்கினார். ஒவ்வொருவரையும் எங்கு அடித்தால் எப்படி வீழ்வார்கள் என்று தெரிந்து கொண்ட மாயா தன்னுடைய அல்லக்கைகளை வைத்து சரியாக காய் நகர்த்தினார்.

அதனாலேயே பிரதீப் அவமானப்படுத்தப்பட்டு வெளியேறினார். அதற்காக உரிமை குரல் கொடுக்கத் தொடங்கிய ரசிகர்கள் இப்போதுதான் கொஞ்சம் ஆறுதல் அடைந்துள்ளனர். அதாவது இப்போது மாயா அண்ட் கோவுக்கு அழிவு காலம் தொடங்கி இருக்கிறது.

Also read: அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்.. டிஆர்பிக்காக ரவுடித்தனத்தை வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

வைல்ட் கார்டு என்ட்ரி ஆக வந்த அர்ச்சனா இவர்களை தற்போது கதற விட்டுக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே இவருடைய நடவடிக்கையை ஈசியாக எடை போட்ட மாயா இப்போது ஒரு மனிதனை எந்திரிக்கவே முடியாமல் அடிச்சா எப்படி என புலம்பும் நிலைக்கு வந்திருக்கிறார்.

அந்த அளவுக்கு அர்ச்சனா நிக்சனை வச்சு செய்து வருகிறார். அவருடைய கேம் ப்ளானை புரிந்து கொள்ளாத நிக்சனும் தற்போது ரெட் கார்டில் சிக்கும் அளவுக்கு சம்பவத்தை செய்துள்ளார். இதைத்தான் கர்மா என்பார்கள். பிரதீப்பை திட்டம் போட்டு வெளியேற்றிய மாயா இப்போது நிக்சனின் நிலைமையை நினைத்து கதறி கொண்டிருக்கிறார்.

செஞ்ச தப்புக்கு மன்னிப்பும் கேட்டாச்சு. ஆனாலும் அடிக்கிறீங்க, சும்மா இருந்தாலும் அடிக்கிறீங்க. தப்ப தட்டி கேட்டாலும் அடிக்கிறீங்க என அவர் தனியாக புலம்பும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வந்தா ரத்தம் பிரதீப்புக்கு வந்தா தக்காளி சட்னியா என மாயா கேங் கதறுவதை ஃபயர் விட்டு கொண்டாடி வருகின்றனர்.

Also read: மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு உண்மையான சுயரூபத்தை காட்டிய நிக்சன்.. பெண்கள் பாதுகாப்பு இதுவா ஆண்டவரே.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்