இந்த மூணு விஷயத்தில் கமல் வாய திறக்கலைன்னா.. பிக் பாஸ்ஸின் மொத்த டிஆர்பியும் போச்சு

Bigg Boss: பிக் பாஸ் வீடு , இந்த வாரம் தொடங்கியதும் கொடுக்கப்பட்ட பூகம்ப டாஸ்க்கால் பிரளயம் ஆகி கிடக்கிறது. மூன்று போட்டியாளர்கள் வெளியேற வேண்டும் மூன்று வைல்டு கார்டு எண்ட்ரிகள் உள்ளே நுழைவார்கள் என பிக் பாஸ் ஆரம்பத்திலேயே தடால் அடி போட்டு விட்டார். இது போதாது என்று இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த வாரம் முழுக்க எபிசோடுகள் ரொம்பவும் டல் அடித்தது. இதனால் கமலஹாசனின் வார இறுதி நாட்களில் இரண்டு எபிசோடுகள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் இந்த வாரம் நடந்த பூகம்ப டாஸ்க் மூலம், கமல் தன்னுடைய எபிசோடில் என்ன சொல்லுவார், யார் வெளியேறப் போகிறார்கள் என்று பெரிய எதிர்பார்ப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை சூழ்ந்து இருக்கிறது.

Also Read:பிக்பாஸ் பூகம்ப டாஸ்க்கால் கிளம்பும் பூதம்.. விசித்ராவை போல் ஆண் போட்டியாளருக்கு நடந்த அந்தரங்க டார்ச்சர்

இந்த பூகம்ப விளையாட்டின் ஒரு பகுதியாக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் பூகம்பம் போல் நடைபெற்ற சம்பவத்தை சொல்ல பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருந்தார். அதில் போட்டியாளர்கள் சொல்லிய அத்தனை விஷயங்களுமே பார்வையாளர்களை யோசிக்க வைத்தது. இந்த வாரம் கமல் கீழ்க்கண்ட மூன்று விஷயங்களைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என ஆடியன்ஸ்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கமல் பேச வேண்டிய மூன்று விஷயங்கள்

மீ டூ: நடிகை விசித்ரா 20 வருடங்களுக்கு முன்பு ஒரு ஹீரோவால் சந்தித்த மீ டூ பிரச்சனையை பற்றி பேசி இருந்தார். இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் கமலஹாசன் தன்னுடைய தரப்பிலிருந்து இந்த மீ டு விஷயத்தை பற்றி பேச வேண்டும், தன்னுடைய தரப்பிலிருந்து நியாமான கருத்தை சொல்ல வேண்டும் என பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மென் டூ: பெண்களுக்கு மட்டும் இந்த சமூகத்தில் பாதுகாப்பு இல்லாமல் இல்லை, ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் தான் இருக்கிறது என பிராவோ சொன்ன கதையின் மூலம் தெரிந்தது. அவருக்கு நடந்த விஷயத்தை இந்தியாவையே வெறுத்து, துபாயில் செட்டில் ஆகி விட்டதாக சொல்லி இருக்கிறார். கமல் இதைப்பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைக் டூ : பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய விதிமீறலாக பார்க்கப்படுவது மைக்கை கழற்றிவிட்டு பேசுவது தான். இந்த தவறை தொடர்ந்து மாயா மற்றும் பூர்ணிமா செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை கமலஹாசன் இதைப் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை. இந்த வாரம் கமல் இதைப்பற்றி விசாரிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் .

Also Read:விஸ்வரூபம் எடுக்கும் விசித்ராவின் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம்.. ஹீரோவுக்கு எதிராக கொடி பிடிப்பாரா ஆண்டவர்.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்