குடும்பத்திற்கு ஏற்ற குத்துவிளக்கு தானா.. சிம்புவை வளைத்துப் போட நினைக்கும் நடிகை

சமீபகாலமாக கோலிவுட்டில் அதிகளவில் கிசுகிசுக்கப்பட்டு வரும் காதல் கதை என்றால் அது சிம்பு மற்றும் நிதி அகர்வாலின் காதல் கதை தான். ஒரே ஒரு படத்தில் தான் இணைந்து நடித்தார்கள். அதற்குள் இருவருக்கும் காதல் தீ பற்ற தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு குறித்து இதுவே பல கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. பல நடிகைகளுடன் அவர் இணைத்து பேசப்பட்டுள்ளார். அதுபோல் தான் நடிகை நிதி அகர்வால் செய்தி என நினைத்தனர். ஆனால் தற்போது இருவருக்கும் திருமணம் என்பதுபோல் செய்திகள் வெளியாகி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை நிதி அகர்வால். முதல் படமே அட்டு பிளாப். இதனை தொடர்ந்து இரண்டாவதாக தான் சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த படமும் பிளாப் தான். இதனால் தற்போது நிதி அகர்வாலுக்கு தமிழில் மார்க்கெட் இல்லை.

எனவே தற்போது பட வாய்ப்பிற்காக சோசியல் மீடியாவில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், வெறும் ப்ரா, கிழிந்த ஸ்கர்ட் என தனது முன்னழகு மற்றும் தொடையழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

என்னதான் நிதி அகர்வாலை திருமணம் செய்ய சிம்பு கொடுத்து வச்சு இருக்கணும் என ரசிகர்கள் கூறி வந்தாலும், ரியாலிட்டியில் இது செட்டாகுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஏனெனில் டிஆர் குடும்பம் ஒரு பாரம்பரியமான அதாவது கட்டுப்பாடான குடும்பம்.

அதனால் பயங்கர கிளாமராக காட்சி தரும் நிதி அகர்வால் அவர்களின் குடும்பத்திற்கு ஒத்து வருவார் என தெரியவில்லை என்பது தான் பலரின் கருத்தாக உள்ளது. இதனால் சிம்பு நயன்தாரா விஷயத்தில் இருந்தது போல் இந்த விஷயத்தில் மாட்டிக்கிட்டான் தற்போது வரும் படவாய்ப்புகளும் தவிடுபொடி ஆகி விடும் என்பது தான் உண்மை.

Next Story

- Advertisement -