சொந்த குடும்பத்தையே வெறுப்பேற்றும் கோபி.. அடுத்தடுத்து நடக்க போகும் பஞ்சாயத்து

விஜய் டிவியில் ரசிகர்களின் பேராதரவு உடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் தற்போது பாக்யாவின் எதிர் வீட்டுக்கு குடுத்தனம் வந்துள்ளார் கோபி. இதை அறிந்த செழியன் குடும்பத்திடம் சொல்லி கதறி அழுகிறார். இதனால் கோபமடைந்த எழில் கத்தியை எடுத்து கோபியை கொல்ல செல்கிறார்.

அப்போது பாக்யா மற்றும் அவரது குடும்பம் எழிலை தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் ஆத்திரம் தாங்க முடியாத எழில் கோபத்தில் கொந்தளிக்கிறார். அந்த சமயத்தில் பாக்யா உங்க அப்பா தான் என்ன விட்டு போயிட்டாரு, நீங்களும் இப்படி பண்ணா எப்படி. அவங்க என்ன வேணா பண்ணிட்டு போகட்டும்.

Also Read :நான் ரொம்ப கெட்டவள்.. பிக்பாஸால் வில்லி அவதாரம் எடுத்த ஜனனி

நீங்கதான் எனக்கு முக்கியம் என்று பாக்யா கதறி அழுகிறார். இதைக் கேட்டு எழில் மற்றும் செழியன் இருவரும் தனது அம்மா பாக்யாவை கட்டிக்கொண்டு அழுகிறார்கள். மேலும் இனியாவை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்ல எழில் வெளியில் பைக் உடன் காத்திருக்கிறார். அவரது அருகில் பாக்யா மற்றும் ஈஸ்வரி இருவரும் இருக்கின்றனர்.

இந்நிலையில் மயூவை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்ல ஸ்கூல் பேக் எல்லாம் மாட்டிக் கொண்டு கோபி சிரித்துப் பேசிக் கொண்டு வருகிறார். இதை அவரது சொந்த குடும்பம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இனியா இதை பார்த்து கோபி மீது எரிச்சல் அடைகிறார்.

Also Read :பத்த வச்ச கண்ணம்மா.. பற்றி எரியும் வெண்பா வீடு

மேலும் எழில் இனியாவை அழைத்து ஸ்கூலுக்கு செல்கிறார். பின்னாலே கோபியும் மயூவை அழைத்துக் கொண்ட காரில் செல்கிறார். கோபியின் இந்த செயலை கண்டு ஈஸ்வரி தனது கணவரிடம் பொய் நியாயத்தை கேட்க சொல்லி வாதாடுகிறார். அவன்கிட்ட போய் என்ன பேச சொல்ற என கோபியின் அப்பா திட்டுகிறார்.

நம்மள வெறுப்பேத்தறதுக்காக கோபி இங்க வந்து இருக்கான். ஆனால் நம்ம சந்தோஷமா வாழ்வதை பார்த்து அவன் தான் இப்ப கடுப்பாக போறான் என ராமமூர்த்தி பேசுகிறார். இதனால் அடிக்கடி கோபி மற்றும் பாக்கியா குடும்பத்தின் அடுத்தடுத்து பஞ்சாயத்து நடக்க உள்ளது.

Also Read :கத்தியை கையில் எடுத்த மகன்.. ராதிகா 3வது புருஷன் தேட நேரம் வந்துடுச்சு

Next Story

- Advertisement -