ரத்த சொந்தங்களை வெறுத்து ஒதுக்கும் தனுஷ்.. அதுக்குன்னு வளர்த்துவிட்டவரை அசிங்கப்படுத்துவதா

கோலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட், பாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் தனுஷின் வாத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் சினிமாவில் நடிக்க வந்தபோது இவரெல்லாம் ஹீரோவா என பலரும் கேலி கிண்டல் செய்தனர்.

ஆனால் அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து, சினிமாவில் இருப்பதற்கு திறமை மட்டுமே அவசியம் என்பதை நிரூபித்து தற்போது அசைக்க முடியாத ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறார். இவருடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவருடைய அண்ணன் செல்வராகவன் தான். இதையெல்லாம் மறந்த தனுஷ், செல்வராகவனையே அசிங்கப்படுத்தும் அளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பதை சோசியல் மீடியாவில் வைரலாக பேசுகின்றனர்.

Also Read: விஜய்யை ஓரங்கட்டி வெற்றி கண்ட தனுஷ்.. சைலன்ட்டாக காரியத்தை சாதித்த வாத்தி

சமீபத்தில் ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வசிக்கும் போயஸ் கார்டனில் 4 கிரவுண்ட் இடம் வாங்கி, 150 கோடியில் பிரம்மாண்டமாக மாளிகையைக் கட்டி, அதில் தன்னுடைய தாய் தந்தையை குடி அமர்த்தினார். இதில் ரத்த சம்பந்தமான செல்வராகவனை அழைக்காமல் விட்டது ஏன் என்றும் கேள்வி எழும்புகிறது. அதேபோல் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இதனால் அம்மாவின் அடக்குமுறை காரணமாக தனுஷின் இரண்டு மகன்கள் ஆன லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் புதுமனை புகு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் தனுஷின் அண்ணனையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது தனுஷ் மற்றும் செல்வராகவன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Also Read: வாத்தியாராக அதிரடி காட்டும் தனுஷ்.. சுடச்சுட வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

மேலும் சமீபத்தில் தனுஷின் வாத்தி மற்றும் செல்வராகவனின் பகாசூரன் படமும் திரையில் மோதிக் கொண்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கெல்லாம் காரணம் கடந்த ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் தனுஷ் இனிமேல் செல்வராகவனின் படத்தில் நடிக்க விருப்பம் இல்லாதது போல் நடந்து கொள்கிறார்.

‘என் நேரத்தை வீணடிக்காதே! உன் லைனை பார்த்துக் கொண்டு நீ போய்விடு’ என்று தனுஷ் செல்வராகவனிடம் கத்தியதால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனஸ்தாபத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் நானே வருவேன் 2 படத்தின் போஸ்டரை ஏற்கனவே வெளியிட்டு, தற்போது படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. இதை தவிர புதுப்பேட்டை 2 அல்லது ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற படங்களில் தனுஷ் நடித்து கொடுப்பதுதான் செல்வராகவனுக்கு செய்யும் மிகப்பெரிய கைமாறாகும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Also Read: குடும்பத்தோடு அவமானப்பட்ட தனுஷ்.. ராஜதந்திரத்துடன் பழிக்கு பழி வாங்கிய அசுரன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்