vijay-antony-pichaikaran2

ருத்ர தாண்டவத்திற்கு தயாரான விஜய் ஆண்டனி.. பட்டையை கிளப்பும் பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர்

அதை தொடர்ந்து பட குழு தற்போது இதன் ட்ரெய்லரை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

arulnithi-kazhuvethi-moorkkan

கொலை பண்றது வீரம் இல்ல, 10 பேர காப்பாத்தறது தான் வீரம்.. அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் டீசர்

அருள்நிதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் டீசர் வெளியாகி உள்ளது.

Surya42

அதிரி புதிரியாக டைட்டிலை வெளியிட்ட சூர்யா 42 டீம்.. ட்ரெண்டாகும் வீடியோ

உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சூர்யா 42 பட டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

manikandan-good-night-teaser

குறட்டையால் சுக்கு நூறாக நொறுங்கிய காதல் கோட்டை.. ஜெய்பீம் நடிகரின் குட் நைட் டீசர்

தற்போது வெளியாகி இருக்கும் குட் நைட் பட டீசரும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

pushpa-2-allu-arjun

புலியே பயந்து பின்னாடி போனா அது புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. புல்லரிக்க வைத்த புஷ்பா 2 க்ளிம்ஸ் வீடியோ

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் இந்த படம் சர்வதேச அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் மிரட்டியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அது மட்டுமல்ல புஷ்பா 2 படத்தின் புல்லரிக்க வைக்கும் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் திருப்பதி சிறையிலிருந்து தப்பித்து செல்லும்போது 8 தோட்டாக்களின் குண்டு பாய்ந்த நிலையில் புஷ்பா தீவிர காயம் அடைந்ததாக செய்திகள் பரவுகிறது. இதனால் அவர் தப்பித்து சென்ற அடர்ந்த காடுகளில் புஷ்பாவை வேட்டையாட ஒரு சிறப்பு படை களம் இறங்கி உள்ளது.

Also Read: அல்லு அர்ஜுனை ஓரங்கட்டிவிட்டு, ஷாருக்கானுக்கு பச்சை கொடி காட்டிய விஜய் சேதுபதி

அப்போது அவருடைய ரத்தக்காயம் படிந்த சட்டையை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். அந்தச் சட்டையில் 8 தோட்டாக்களின் துளை இருப்பதையும் போலீசார் பொதுமக்களிடம் காட்டுகிறார்கள். இதனால் அவர் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறியதால் அப்பகுதியில் கலவரம் வெடிக்கிறது.

கோபத்தில் புஷ்பாவின் ஆதரவாளர்கள் வன்முறையை கையில் எடுத்து கடைகளை உடைத்தும், எரித்தும் கொண்டிருக்கின்றனர். மேலும் புஷ்பா அரசாங்கத்திற்கு எதிராக மரத்தை கடத்தி தவறான வழியில் சம்பாதித்தாலும் அந்த பணத்தை பொதுமக்களுக்காக பயன்படுத்தி இருக்கிறார்.

Also Read: பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஆடவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா

ஏழைகளின் மருத்துவ செலவிற்கும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்தும், வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தும் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இவ்வளவு செய்த புஷ்பாவிற்காக பொதுமக்கள் ஒன்றாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஒரு மாதமாக கலவரம் தொடர்வதால் பெரும்பாலான பகுதியில் ஊரடங்கையும் அமல்படுத்தினர்.

மறுபுறம் புஷ்பா உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் ஜப்பான், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் புஷ்பாவை கொன்று புதைத்து விட்டு போலீஸ் நாடகமாடுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு தோன்றுகிறது. உண்மையில் புஷ்பா எங்கே? என பெரும் பரபரப்பை கிளப்புகிறது.

Also Read: 2023ல் வெளிவர இருக்கும் 10 ஹிட் படங்களின் 2-ம் பாகம்.. பொன்னியின் செல்வன் முடிவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

கடைசியில் புலிகளை கண்காணிப்பதற்கான கேமராவில் காட்டு விலங்குகள் எல்லாம் 2 அடி பின்னாடி வச்சா, புலி வந்திருச்சின்னு அர்த்தம். அந்தப் புலியே இரண்டடி பின்னாடி வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம் என்ற பஞ்ச் டயலாக் உடன் அல்லு அர்ஜுன் புலியை விட ஆக்ரோஷமாக தெரிகிறார். இந்த க்ளிம்ஸ் வீடியோவை பார்த்த பலருக்கும் புல்லரித்து போனது. முதல் பாகத்தை போலவே புஷ்பா 2-வும் தாறுமாறாக இருக்கப் போகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

புஷ்பா 2 படத்தின் டிரைலர் இதோ!

ruthran-movie-trailer

எப்புட்றா! காஞ்சனா படத்தின் அட்ட காப்பிதான் ருத்ரனா? தம்மு, தண்ணி, கஞ்சா விட போதை எது தெரியுமா?

காஞ்சனா பட சாயலில் வெளிவந்திருக்கும் ருத்ரன் பட ட்ரெய்லர்.

Thiruvin-Kural-movie-Arulnithi

வெறித்தனமாக வெளியான திருவின் குரல் ட்ரெய்லர்.. புத்தாண்டு ரேசில் குதித்த அருள்நிதி

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் அருள்நிதி, இப்போது இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் திருவின் குரல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் வெறித்தனமான டிரைலர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இதில் முதல் முதலாக பாரதிராஜா உடன் இணைந்து அருள்நிதி தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். இதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அருள்நிதிக்கு அப்பாவாக நடித்துள்ளார். இவர்களுடன் சுபத்ரா, மோனிகா சிவா, அஷ்ரப், ஏஆர் ஜீவா, சோமசுந்தரம், மகேந்திரன் மற்றும் முல்லையரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Also Read: திறமை இருந்தும் பிரேக்கிங் பாயிண்ட் கிடைக்காமல் திணறும் அருள்நிதி.. ‘விக்டர்’ கேரக்டர் போல் கிடைத்திருக்கும் ஜாக்பாட்

மேலும் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இதில் அருள்நிதி வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாகவும் நடித்துள்ளார். அது மட்டுமல்ல பக்கத்தில் பேசினால் மட்டுமே அருள்நிதியால் கேட்க முடியும். தூரத்தில் பேசுவதை அவரால் கேட்க முடியாது. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ள திருவின் குரல் ட்ரெய்லர், பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

இந்த படத்தில் பிண அறையில் வேலை செய்யும் ஊழியர்கள் இருவர், தங்களை மருத்துவர்களை விட உயர்வாக நினைத்துக் கொண்டு மனித உயிர்களுடன் விளையாடுகிறார்கள். இதில் அருள்நிதியின் குடும்பமும் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. இதையெல்லாம் கண்டுபிடித்த அருள்நிதி அவர்களை எப்படி வெறிகொண்டு வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

Also Read: 2ம் பாகம் தான் எங்களுக்கு ஒரே வழி.. அருள்நிதி முதல் ஜெயம் ரவி வரை தவம் கிடக்கும் 5 ஹீரோக்களின் படங்கள்

ட்ரெய்லரே விறுவிறுப்பாக இருக்கும் போது நிச்சயம் படமும் சூப்பராக இருக்கும் என்று இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக உள்ளதாகவும் அந்த ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் புத்தாண்டு ரேசில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’, சமந்தாவின் ‘சாகுந்தலம்’, பிரபாஸின் ‘சலார்’, இளமை எனும் பூங்காற்று போன்ற படங்கள் ரிலீஸ் ஆகுவதை தொடர்ந்து, அருள்நிதியின் திருவின் குரல் என்ற அதிரடி திரைப்படமும் வெளியாகிறது.

திருவின் குரல் ட்ரெய்லர் இதோ!

Also Read: சரியான ரூட்டை தேர்வு செய்த அருள்நிதி.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் போச்சு