இந்த ஒரு நாளை வைத்து 40 எபிசோடை ஓட்டும் விஜய் டிவி.. பாரதியை விடாமல் துரத்தும் வெண்பா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் எட்டு வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய பிறந்தநாள் அன்று லஷ்மிக்கு அவளுடைய அப்பாவை காட்டப் போவதாக கண்ணம்மா வாக்கு கொடுத்திருக்கிறார். இதற்காக பாரதியை கண்ணம்மா அழைத்தபோது அவர் வர மறுத்து விட்டார்.

ஒருவேளை சென்னையில் இருந்தால் சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் வற்புறுத்தி பாரதியை கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள் என்ற பயத்தில் பாரதி ஹைதராபாத் செல்ல திட்டமிட்டு டிக்கெட் எடுக்கிறார்.

ஆனால் ஹேமா இதற்கு சம்மதிக்காததால் அந்தக் டிக்கெட்டை கிழித்து எறிந்து விடுகிறான். இதைப்பார்த்த வெண்பா, பாரதியை மேலும் உசுப்பேத்தி விடும் அளவுக்கு பேசுகிறாள். கண்ணம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அசிங்கப்பட்ட போகிறாயா என்றும் பாரதியை கடுப்பேற்றி விடுகிறாள்.

இதனால் கோபத்தின் உச்சத்தில் இருக்கும் பாரதி, தன்னுடைய மகள் ஹேமா தனக்குப் பிடித்த மாதிரி நடந்துக் கொள்ளாததால் விரக்தியடைந்து வெண்பாவின் பேச்சில் மீண்டும் பாரதி விழ பார்க்கிறான்.

அத்துடன் லஷ்மியும் தன்னுடைய அப்பாவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பதால், கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு ஹேமாவின் வற்புறுத்தலால் அங்கு செல்லும் பாரதி, வெண்பாவையும் கூட அழைத்துச் சென்று கண்ணம்மாவை மீண்டும் கடுப்பேற்ற போகிறான்.

அதன்பிறகு பாரதிதான் அப்பா என்று கண்ணம்மா லஷ்மிக்கு உண்மையை போட்டு உடைக்க போகிறாள். குழந்தையின் மனதை புண்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த சமயம் பாரதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறான். இந்த பிறந்தநாளை வைத்து விஜய் டிவி கிட்டதட்ட 40 எபிசோடுகளை ஓட்டி விடும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -