காஷ்மீர் குளிரில் விஜய்க்கு இதமாக இருந்த திரிஷா.. தீயை பற்ற வைத்த பயில்வான்

விஜய் மற்றும் திரிஷா இருவரும் எவர்கிரீன் ஜோடியாக இருந்து வரும் நிலையில் இவர்களைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் இப்போது பயில்வான் ரங்கநாதன் பெரிய குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். அந்த செய்தி தான் இப்போது இணையத்தில் பூதாகரமாக வெடித்திருக்கிறது.

அதாவது விஜயுடன் திரிஷா ஓவர் நெருக்கம் காட்டி படத்தில் நடித்து வருவதால் சங்கீதாவுக்கு கோபம் ஏற்பட்டிருந்ததாம். இதனால் இனி திரிஷாவுடன் நடிக்கவே கூடாது என விஜய்யிடம் சங்கீதா கேட்டுக்கொண்டதாக பயில்வான் கூறியிருக்கிறார். ஆனால் லியோ படத்தில் திரிஷாவை கமிட் செய்ய வைத்தது விஜய் தானாம்.

இந்த படத்தில் திரிஷாவை நடிக்க வைக்கலாம் என்று விஜய் கேட்டுக் கொண்டதாகவும் இதனால் சங்கீதா கோபப்பட்டு லண்டன் சென்றுவிட்டார் என்று பயில்வான் கூறியிருக்கிறார். ஆனால் இந்த செய்தி ஏற்கனவே செய்தித்தாள்களில் வந்த ஒன்றுதான். ஆனால் இப்போது மிகப்பெரிய தீயை பற்ற வைத்திருக்கிறார் பயில்வான்.

அதாவது லியோ படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டது. அப்போது மைனஸ் டிகிரி குளிரில் இருக்கும் போது ரத்தம் எல்லாம் உறையும் அளவிற்கு இருந்துள்ளது. இந்த குளிரில் நடுங்கிய விஜய்க்கு இதமாக திரிஷா இருந்துள்ளார் என்று பயில்வான் கொளுத்தி போட்டுள்ளார். அதுவும் இதை நான் சொல்லவில்லை திரிஷாவே கூறியிருக்கிறார்.

அதாவது அங்கு குளிர் அதிகமாக இருக்கும் போது விஜய் தன்னை கட்டிப்பிடித்துக் கொள்வார் என திரிஷா தான் கூறியிருக்கிறார் என்று பயில்வான் சொல்லி தப்பித்துக் கொண்டார். மேலும் குளிர்காக கட்டி பிடித்துள்ளார்கள் வேறு எதுவும் தவறு இல்லை என அப்படியே பிளேட்டை தலை கீழாக மாற்றி இருக்கிறார். திரிஷா எப்போதுமே எள் என்றால் எண்ணையாக வந்து நிற்பார்.

அதேபோல் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுடன் ஓவர் நெருக்கம் காட்டி படத்தில் நடித்திருப்பார். மேலும் சாமி படத்திலும் அப்படி தான். விக்ரமுக்கு சரியாக ஈடு கொடுத்து நடித்திருந்தார். அந்த படத்தில் நானும் நடித்ததால் இதை நேராகவே பார்த்திருக்கிறேன் என்று திரிஷாவை பற்றி நிறைய விஷயங்களை பயில்வான் பகிர்ந்து இருக்கிறார்.

Next Story

- Advertisement -