சனிக்கிழமையானா என் அவதாரமே வேற.. நைட் பார்ட்டியில் அம்மா நடிகை செய்த அட்டூழியம்

சினிமா கலைஞர்களுக்கு பார்ட்டி எல்லாம் சாதாரண விஷயம் தான். அதிலும் இப்போது நைட் பார்ட்டி, பப் போன்ற கலாச்சாரங்கள் சினிமா பிரபலங்களுக்கிடையே அதிகமாகி வருகிறது. இதில் ஹீரோ ஹீரோயின்கள் மட்டுமல்லாமல் மூத்த கலைஞர்களும் அட்ராசிட்டி செய்வது தான் பெரும் கொடுமையாக இருக்கிறது.

அதிலும் சனிக்கிழமை ஆகிவிட்டாலே போதும் அனைவரும் பார்ட்டி மூடுக்கு வந்து விடுகின்றனர். இதனாலேயே வார இறுதி நாட்களில் ஈசிஆர் களைக் கட்டிக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வரும் நடிகையும் இது போன்ற கலாச்சாரங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம்.

இப்போது அவருக்கு வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் ஆன்ட்டி இதுபோன்ற பார்ட்டிகளுக்கு சென்று வாய்ப்பை பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு இரவு விடுதியில் இவர் செய்த அட்டூழியம் தான் சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: பரிதாபப்பட்டு இடம் கொடுத்ததற்கு பட்டா போட்ட நடிகை.. தலையணை மந்திரத்தால் மயங்கிய கணவன்

அதாவது ஆறு மணிக்கு மேல என் அவதாரமே வேற என்ற கதையாக ஆன்ட்டி கழுத்து வரை குடித்திருக்கிறார். அதை தொடர்ந்து நிற்க முடியாமல் தள்ளாடியவரை அங்கு இருந்தவர்கள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று இருக்கின்றனர். ஆனாலும் விடாமல் அவர் அங்கேயே குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ஆன்ட்டி ஓவர் ஆட்டத்தினால் அங்கேயே ஆஃப் பாயில் போட்டு இருக்கிறார். இப்படி மூக்கு முட்ட குடித்து வாந்தி எடுத்து நாறடித்த சீனியர் நடிகையை பற்றிய பேச்சு தான் இப்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளம் நடிகைகள் தான் வாய்ப்புக்காக இது போன்ற இடங்களுக்கு செல்கிறார்கள் என்றால் இந்த ஆன்ட்டிக்கு புத்தியே இல்லையா என சிலர் வெளிப்படையாகவே பேசி வருகிறார்களாம். அந்த அளவுக்கு வயதுக்கு ஆட்டத்திற்கும் சம்பந்தமில்லாமல் அலப்பறை கொடுத்திருக்கிறார் இந்த அம்மா நடிகை.

Also read: ஹோட்டலில் மாஸ் நடிகர் செய்த அந்தரங்க லீலை.. கணவருக்கு தெரிந்ததால் நடந்த விவாகரத்து

Next Story

- Advertisement -