பெண் நீதிபதியிடம் 9 கோடியை மோசடி செய்த ஜோதிடர்.. உடந்தையாக இருந்தாரா பிரபல நடிகை?

எவ்வளவுதான் படித்து பெரிய பெரிய பதவி வகித்தாலும், ஜாதகத்தில் சிலருக்கு அபரிவிதமான நம்பிக்கை  இருந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே இவர்களுக்கென்று சில ஆசாமிகள் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் தற்போது ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஒருவர், யுவராஜ் என்கின்ற புகழ்பெற்ற ஜோதிட ஆசாமியிடம் சிக்கிக்கொண்டு ரூ. 8.80 கோடியை பறிகொடுத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் ஓய்வு பெற்ற அந்தப் பெண் நீதிபதிக்கு, கர்நாடகாவில் ஆளுநர் பதவி வாங்கித் தருவதாக ஜோதிட ஆசாமி ஆசை காட்டி உள்ளார். இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் இரண்டாவது மனைவியும், பிரபல நடிகையுமான குட்டி ராதிகாவிற்கும், இந்த மோசடி மன்னன் யுவராஜ் ஜோதிடருக்கும் நட்பு இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. எனவே இதுகுறித்து குட்டி ராதிகாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சினிமா படத்தில் நடிப்பதற்காக, யுவராஜ் ஜோதிடரிடம் இருந்து ரூ. 75 லட்சம் சம்பளமாக பெற்றதாக விளக்கமளித்தார்.

kutty-radhika-cinemapettai

மேலும் யுவராஜ், குட்டி ராதிகாவின் குடும்பத்திற்கு சுமார் 17 வருடங்களாக குடும்ப ஜோதிடராக இருப்பதால், எதிர்காலம் குறித்து அவர் கூறிய ஜோசியம் பலித்ததாலே, யுவராஜ் மீது தங்கள் குடும்பத்திற்கு தனி மரியாதை இருப்பதாகவும் விவரித்தார் குட்டி ராதிகா.

எனவே யுவராஜ், குட்டி ராதிகாவிடம் புதிய படம் ஒன்றை எடுக்க விரும்பியதாகவும் அந்த படத்திற்கு ‘நாட்டிய ராணி சாந்தலா’ என்ற பெயரும் அவர்கள் பேசி முடித்துள்ளனர். ஆகையால் இவர்களுடைய இந்த நட்பிற்கும், பெண் நீதிபதியிடம் யுவராஜ் செய்த மோசடிக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பது போலீசாரின் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்