படுக்கைக்கு அழைத்த நபரை காட்டிக்கொடுத்த அனிதா சம்பத்.. சிங்கப் பெண்ணே என கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிக்க வரும் புதிய நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை பலருக்கும் உண்டு. அந்த வகையில் நடிகை மற்றும் செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்திடம் ஒருத்தர் வசமாக சிக்கி விட்டார்.

சினிமா குறித்த செய்திகள் என்றாலே பெரும்பாலும் பட வாய்ப்பு தருகிறேன் எனக் கூட்டிச் சென்று ஏமாற்றிய கதையாகத்தான் இருக்கும். இல்லையென்றால் பட வாய்ப்புக்காக தயாரிப்பாளரோ இயக்குனரோ படுக்கைக் அழைத்தார்கள் என்று கூறுவார்கள்.

ஆனால் சமீபகாலமாக சினிமாவில் சின்ன வேலை பார்த்தாலும் பட வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என பலரும் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். அந்த வகையில் படங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் நபர் என தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஒரு இளம்பெண்ணை ஒருவர் படுக்கைக்கு அழைத்துள்ளார்.

அந்த பெண் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனிதா சம்பத்திற்கு அனுப்பியுள்ளார். அவர் கொஞ்சமும் யோசிக்காமல் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிதா சம்பத்.

anitha-sampath-shares-vulgar-screenshot
anitha-sampath-shares-vulgar-screenshot

புதிய பட வாய்ப்புகள் தருகிறேன் என பல இளம் பெண்களும் இப்படித்தான் ஏமாறுகிறார்கள் எனவும், இதுபோன்ற பொய்யான அழைப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அனிதா சம்பத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சமூக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம் இளம்பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய அனிதா சம்பத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அநியாயத்திற்கு குரல் கொடுப்பேன் என விஜயசாந்தி ரேஞ்சுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார் நம்ம அனிதா சம்பத்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்