சொந்தப் படம் எடுத்து நஷ்டப்பட்ட நடிகை.. பணத்தை கொடுக்காததால் ஆடை இல்லாமல் அடைத்து வைக்கப்பட்ட கொடூரம்

திரைக்கு முன்னால் அழகு பதுமைகளாக வரும் நடிகைகள் பலரும் நிஜ வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்ததுண்டு. அப்படித்தான் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்த ஒருவர் சொந்த படம் எடுக்க ஆசைப்பட்டு கையை சுட்டுக் கொண்டார்.

அதன் விளைவாக அவர் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சம் நெஞ்சம் கிடையாது. பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையில் ஒரு படத்தை எடுத்தார். ஆனால் அவரின் போதாத காலம் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

Also read: முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு?. உதவி இயக்குனரை சந்தோஷப்படுத்திய சோப்பு நடிகை

இதனால் நடிகைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் நடிகை தன் கையில் இருந்த பணத்துடன் சேர்த்து வட்டிக்கு பணம் வாங்கி தான் படத்தை எடுத்து முடித்து இருந்தார். ஆனால் படம் நஷ்டம் அடைந்ததால் அவரால் சொன்ன தேதியில் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

இதனால் கடுப்பான அந்த பைனான்சியர் நடிகையை கடத்திக் கொண்டு போய் தன்னுடைய இடத்தில் வைத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நடிகையின் ஆடையை கழட்டி ரூமில் அடைத்தும் வைத்திருக்கிறார். இது நடிகைக்கு பயத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் அவமானத்தையும் கொடுத்திருக்கிறது.

Also read: ஹீரோயினை அடைய நினைத்த 60 வயது இயக்குனர்.. எதுவும் பண்ண முடியாததால் அசிங்கப்படுத்திய பப்ளி நடிகை.!

அந்த பைனான்சியர் நடிகையை மிரட்டுவதற்காகவே இது போன்ற ஒரு கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார். மேலும் பணத்தை கொடுத்தால் உன்னை அனுப்பி விடுகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். அதைத்தொடர்ந்து நடிகையின் தரப்பிலிருந்து அடித்து பிடித்து பணத்தை ஏற்பாடு செய்து அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு தான் நடிகை பத்திரமாக வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்