இந்த 4 படங்களில் ஐஸ்வர்யா ராய் என்கூட நடிக்க மறுத்துட்டாங்க.. கெஞ்சி கூத்தாடி கடைசியாக நடித்த ரஜினியின் எந்திரன்

Rajini and Aiswarya Rai: சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகர்கள் எப்படியாவது ரஜினியுடன் ஒரு படத்துலயாவது சேர்ந்து நடித்து விட மாட்டோமா என்று தவமாக தவம் இருந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு நடிகை யார் என்றால் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

அந்த வகையில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய் நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் நான்கு முறை கிடைத்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஐஸ்வர்யா ராய் ஏதாவது ஒரு காரணங்களை சொல்லி தட்டிக் கழித்திருக்கிறார். படையப்பா படத்தில் அவர் சொன்னது என்னவென்றால் நீலாம்பரி கேரக்டர் நெகட்டிவ் என்பதால் அது எனக்கு வேண்டாம் என்றும் அடுத்து சௌந்தர்யா கேரக்டர் ரொம்பவே சாப்ட்டாக இருப்பதால் அது எனக்கு செட்டாகாது என்று சொல்லி மறுத்திருக்கிறார்.

அடுத்ததாக பாபா படத்தில் ரஜினி ஆசை ஆசையாக காதலிக்கும் சாமுண்டீஸ்வரி கேரக்டருக்கு கேட்ட பொழுது பணத்துக்காக காதலை வேண்டாம் என்று மறுக்கும் கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை என்று ஐஸ்வர்யா ராய் தேடி வந்த வாய்ப்பை நிராகரித்திருக்கிறார். அதன்பின்னே மனிஷா கொய்ராலா இந்த கேரக்டரை எடுத்து நடித்தார். நல்ல வேளை ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடிக்கவில்லை. இல்லையென்றால் அவருடைய கேரியரில் பெரும் தோல்வியை சந்தித்து இருப்பார்.

Also read: 4 படங்களில் ரஜினியுடன் கவுண்டமணி செய்த அலப்பறைகள்.. எஜமானுடன் தூக்கு சட்டிக்கு அலைந்த வெள்ளயங்கிரி

இதனை அடுத்து சந்திரமுகி படத்தில் நயன்தாரா கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராய் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் மற்றும் ரஜினி ஐஸ்வர்யா ராயிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ இந்த கேரக்டர் எனக்கு பெருசாக முக்கியத்துவம் இல்லாதது போல் தெரிகிறது. அதனால் வேறொரு படம் பண்ணும் போது நல்ல கேரக்டர் இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்ததாக சிவாஜி படத்தில் ஸ்ரேயா கேரக்டருக்கு கதையை சொல்லி இருக்கிறார்கள். இந்த முறை நீங்கள் எதிர்பார்த்த எல்லாமே இந்த படத்தில் உங்களுக்கு கிடைக்கும் என்ற ரஜினி கூறியிருக்கிறார். அதாவது முக்கியமான ஹீரோயின் ரோல், அதற்கு ஏற்ற மாதிரி இந்த கேரக்டர் ரொம்பவே அழுத்தமானது. இது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று ரஜினி சொல்லி இருக்கிறார்.

அதற்கு ஐஸ்வர்யா ராய் எல்லாமே சரிதான். ஆனால் தற்போது இங்கிலீஷ் படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருக்கிறேன். அதனால் நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன் என்று சிவாஜி படத்தை மறுத்திருக்கிறார். அதன்பின் கெஞ்சி கூத்தாடி ஐஸ்வர்யா ராயை தொடர்ந்ததால் கடைசியாக கிடைத்த சான்ஸ் தான் எந்திரன் படத்தில் சனா என்ற கேரக்டரில் நடித்தார். எப்படியோ ரஜினிக்கு இருந்த ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

Also read: ரஜினியை பார்க்க கூட விரும்பாத விஜய்.. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் பெருசாக்கும் தளபதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்