ரஜினி வீட்டு பக்கத்துல குடி இருக்க முடியல, ஆவேசமான பெண்.. இது என்ன தலைவருக்கு வந்த சோதனை

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மூன்று தலைமுறைகளாக சினிமா ரசிகர்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட ரஜினி ஒரு முறை ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்க்க சென்றிருந்தபோது அவரைப் பார்த்து ஒருவர் யார் சார் நீங்க என்று கேட்பார், அதற்கு ரஜினி நான் தான் பா ரஜினி என பதில் சொல்லி இருப்பார். இது அப்போது பயங்கர ட்ரெண்டாகியது. அதே மாதிரி தான் மீண்டும் ரஜினியை ட்ரோல் செய்பவர்களுக்கு கன்டென்ட் கொடுக்கும் வகையில் இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது.

யார் சூப்பர் ஸ்டாராக இருந்தா எனக்கென்ன, எனக்கு பிரச்சனைனா நான் விடமாட்டேன் என்னும் அளவுக்கு ஒரு பெண் இறங்கி பேசிய வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் பக்கத்து வீட்டு பஞ்சாயத்து அவருக்கும் இருக்கும் போல தெரிகிறது. அதனால் தான் சூப்பர் ஸ்டார் வீட்டின் பக்கத்து வீட்டு பெண் அவரை இந்த அளவுக்கு பங்கப்படுத்தி இருக்கிறார்.

சென்னையில் அதிகமான தொழிலதிபர்கள் மற்றும் நட்சத்திரங்கள் இருக்கும் ஏரியா தான் போயஸ் கார்டன். இப்போது 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் நினைத்தால் கூட அந்த இடத்தில் வீடு வாங்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரை அந்த இடம் ராணுவ கட்டுப்பாடு போல் இருந்தது. ஜெயலலிதாவுக்கு அடுத்து அங்கு பல வருடங்களாக குடியிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Also Read:அடிபொலி! இது வேட்டையனின் பொங்கல்.. மாஸ் லுக்கில் வெளியான புதிய போஸ்டர்

ரஜினியின் பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் அவரை வீட்டுக்கு வந்து சந்திக்க நினைக்கும் ரசிகர்களுக்கு வெளியில் வந்து தரிசனம் கொடுப்பார். அவர் அந்த காம்பவுண்ட் சுவருக்கு பின்னால் நின்று கொண்டு கையசைத்தால் கூட அவருடைய ரசிகர்களுக்கு அன்றைய நாள் திருவிழா தான். இது வருடா வருடம் ரஜினி வீட்டில் நடக்கும் சம்பிரதாயம். இதில் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருப்பது ரஜினியின் பக்கத்து வீட்டு பெண்தான் போல.

ரோட்டில் இறங்கி சண்டை போட்ட பக்கத்து வீட்டு பெண்

இந்த பொங்கலுக்கு ரஜினி தன்னுடைய ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்ததோடு பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி தன்னுடைய பவரை காட்டி இருந்தார். அவர் வெளியில் வருவதற்கு முன்பே, அவருடைய பக்கத்து வீட்டுப் பெண் அவருடைய பவரை காட்டிவிட்டார். ரஜினி வீட்டு பக்கத்தில் இருப்பதால் நாங்கள் ரொம்பவும் தொல்லைக்கு உள்ளாகிறோம், அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கிறேன் என்ற பெயரில் இங்கு கூடும் கூட்டத்தால் எங்களால் நிம்மதியாக சாமி கூட கும்பிட முடியவில்லை.

அவர் வீட்டு கேட்ட திறக்க சொல்லி எல்லாரும் உள்ள போங்க, அவர் பொண்டாட்டி சமீபத்தில் நாங்க டாக்ஸ் எல்லாம் சரியாக கட்டுகிறோம் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். நாங்களும் தான் எல்லா வரியும் சரியாக காட்டுகிறோம், அவங்களுக்கு கிடைக்கிற எந்த ஒரு சலுகையை எங்களுக்கு கிடைப்பதில்லை. ரசிகர்களை பார்க்க வேண்டும் என்றால் ஏதாவது ஒரு கல்யாண மண்டபம் அல்லது அவருடைய அலுவலகத்தில் வைத்துப் பார்க்கச் சொல்லுங்கள் என ரோட்டில் இறங்கி அந்த பெண் கத்தும் வீடியோ இப்போது பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also Read:ரஜினி ஹீரோயிசம் காட்டாத 6 படங்கள்.. நூறாவது படத்தில் தோற்றுப் போன தலைவர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்