வேணாம்னு கும்பிடு போட்டு நிராகரித்த தளபதி.. பட்டி டிங்கரிங் பார்த்து சூர்யாவுக்கு செட் பண்ணிய இயக்குனர்

Thalapathy Vijay: மாப்பிள்ளை இவர்தான், இவர் போட்டு இருக்க சட்டை என்னோடதுனு ரஜினி காமெடி ஒன்னு வரும். அப்படித்தான் இப்போ ஹீரோ இவர்தான், இவர் நடிச்ச இந்த படம் நான் நடிக்க வேண்டியது என விஜய் சொல்லும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

பொதுவாக ஒரு ஹீரோ ரிஜெக்ட் பண்ண கதையில், இன்னொரு ஹீரோ நடிப்பது என்பது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம் தான். அந்த படத்தைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறந்து சொன்னால் தான், ஓ! இது இவங்க ரிஜெக்ட் பண்ண கதையா, இது இவங்க நடிக்க வேண்டிய கதையா என நமக்கு தெரிய வரும்.

ஆனா ஒரு படத்தின் அப்டேட் வெளியாகும் போது, அந்த கதையை முன்னாடி ரிஜெக்ட் செய்தது யார் என தெரிவது எல்லாம் கொஞ்சம் கொடுமை தான். தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கூட வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, தளபதி 69 பற்றி அதிக எதிர்பார்ப்புகளுடன் கூடிய பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் தன்னுடைய 69ஆவது படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து விலக இருப்பது தான். இந்த படத்திற்கு ஏகப்பட்ட பேர் கதை சொல்லி இருப்பதாக செய்திகள் வெளியானது. இயக்குனர்கள் வெற்றிமாறன், தாடி பாலாஜி, கௌதம் வாசுதேவ் மேனன், அட்லீ என நிறைய பேர் வெளியானது.

தற்போதைக்கு இயக்குனர் ஹெச் வினோத் தான் தளபதி 69 படத்தை இயக்க இருப்பதாக ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது. மேலும் இந்த படத்தோடு அதிகப்படியாக சம்பந்த படுத்தப்பட்ட பேசப்பட்டவர் கார்த்திக் சுப்புராஜ். சமீபத்தில் இவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்னும் பெரிய ஹிட் படத்தை கொடுத்தார்.

கும்பிடு போட்டு நிராகரித்த தளபதி

இதனால் விஜய் இம்ப்ரஸ் ஆகி கார்த்திக் சுப்புராஜ் இடம் கதை கேட்டதாக தெரிகிறது. அடுத்து கார்த்திக் தான் விஜய்யை இயக்கப் போகிறார் என்று கூட அப்போது செய்தி வெளியாகி கொண்டிருந்தது. ஆனால் கடைசியில் கார்த்திக் சுப்புராஜ் தளபதி 69 படத்தை இயக்கப் போவதில்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்கப் போவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. விஜய்க்கு கதை சொல்லி, அவர் ரிஜெக்ட் செய்த நிலையில்தான் அதை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்துத்தான் சூர்யாவுக்கு கதை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

முழுக்க முழுக்க அரசியல் கதைகளத்தில் கதையை எதிர்பார்த்து இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் அது மாதிரி ஒரு ஒன் லைன் சொல்லாததால் தான் இந்த படம் ரிஜெக்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்