இந்த ஆயா கிட்ட இருந்து ஆம்பளைங்க சூதானமா இருங்க.. மாயாவை கிழித்து தோரணம் கட்டிய பிரபலம்

Maya-Biggboss 7: பிக்பாஸ் வீடு நாளுக்கு நாள் ரணகளமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது ரத்த பூமி என்று சொல்லும் அளவுக்கு யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என அலப்பறை செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் மாயா மற்றும் அவருடைய அல்லக்கைகள் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டி கொஞ்ச நஞ்சம் கிடையாது.

அதனாலேயே இப்போது மாயா சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக கலாய்க்கப்பட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் அவர் மீது இருக்கும் பழைய குற்றச்சாட்டுகள் கூட இப்போது பூகம்பமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் அவருக்கு பெண்கள் மீது இருக்கும் ஈர்ப்பு பற்றிய விவகாரம் தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பூர்ணிமா இப்போது அவர் வலையில் சிக்கி இருப்பது கொஞ்சம் பரிதாபமாக தான் இருக்கிறது. இந்த சூழலில் நடிகை ஷகிலா மாயாவை பற்றிய கருத்துக்களை வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என தெரிவித்துள்ளார். அதாவது நான் ஆயா என்றால் மாயாவும் ஆயா தான்.

Also read: செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் தேடும் விஜய் டிவி.. பிரதீப்புக்கு கிடைத்த மறு வாய்ப்பு

அவர் ஒன்னும் பெரிய உலக அழகி கிடையாது. கேப்டனாக இருந்து கொண்டு விசித்ராவுக்கு பிரஷ் கொடுக்க மறுத்துவிட்டார். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் நடக்கிறதே வேற. இதுல இவங்களுக்கு ஆண்களால் ஆபத்து இருக்கா என பொரிந்து தள்ளியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆம்பளைங்க எல்லாம் பாதுகாப்பா இருக்கணும்.

கானா பாலாவை தவிர மத்தவங்க எல்லாம் மாயா கிட்ட இருந்து கவனமா இருக்கணும் என அவரை கிழித்து தொங்கவிட்டுள்ளார். ஷகிலா மட்டுமல்லாமல் பல பிரபலங்கள் கூட இதையேதான் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு மாயாவின் நடவடிக்கைகள் பலரையும் வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறது.

வீட்டில் இருப்பவர்களை கலாய்ப்பது மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது என தன்னுடைய சுய ரூபத்தை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில் பூர்ணிமாவையும் சேர்த்துக் கொண்டு இவர் ஆடும் ஆட்டம் இப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Also read: பிக்பாஸை மிரள விட்ட 8 சர்ச்சை போட்டியாளர்கள்.. ஆண்டவருக்கே தண்ணி காட்டிய பிரதீப்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்