போலீசாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விஜயகாந்த்தின் 5 படங்கள்.. சத்திரியனுக்கு சாவே கிடையாது!

தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரத்தில் எத்தனையோ நடிகர்கள் நடித்து இருந்தாலும் நம்மில் பலருக்கும் பிடித்த போலீஸ் கதாபாத்திரம் நடிகர் என்றால் அது நம் கேப்டன் விஜயகாந்த் தான்.இவரது நடிப்பில் வெளியான ஐந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த போலீஸ் கெட்டப் திரைப்படத்தை தற்போது பார்க்கலாம்.

கேப்டன் பிரபாகரன்: 1991ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கியிருந்தார். சரத்குமார்,ரம்யா கிருஷ்ணன், எம் என் நம்பியார், மன்சூரலிகான் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. ஐ.எஃப்.எஸ் போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடித்து அசத்தியிருப்பார்.

புலன் விசாரணை: 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புலன் விசாரணை திரைப்படத்தில் ராதாரவி,சரத்குமார்,ரூபிணி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் ஏசிபி ஹானஸ்ட் ராஜ் ஆக விஜயகாந்த் நடித்திருப்பார். ரவுடி ஆனந்தராஜா கடத்தப்படும் பெண்களை காப்பாற்றும் போலீசாகவும், கடத்தலுக்கு பின்புலமாக செயல்படும் அரசியல்வாதி ராதாரவிக்கு பாடம் புகட்டும் விதமாக விஜயகாந்த் நடித்து அசத்தியிருப்பார்.

வாஞ்சிநாதன்: 2001ஆம் ஆண்டு வெளியான வாஞ்சிநாதன் திரைப்படத்தை இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியிருந்தார். நடிகை ரம்யாகிருஷ்ணன், சாக்ஷி பிரகாஷ்ராஜ் ,உள்ளிட்டோர் நடித்த திரைப்படத்தில் பத்திரிக்கைகளை வைத்து சட்டத்தை தவறாக கையாளும், அரசியல்வாதி பிரகாஷ் ராஜிடமிருந்து சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் போலீசாக வாஞ்சிநாதன் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து அசத்தியிருப்பார்.

ஊமை விழிகள்: 1986ஆம் ஆண்டு வெளிவந்த ஊமைவிழிகள் திரைப்படத்தை இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் வயதான தோற்றத்தில் காவல் கண்காணிப்பாளராக நடித்திருப்பார். ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு செல்லும் பெண்கள் எல்லாம் காணாமல் போகும் நிலையில் அதை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து அசத்தியிருப்பார்.

சத்திரியன்: 1990ஆம் ஆண்டு இயக்குனர் சுபாஷ் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த், ரேவதி, பானுப்ரியா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. வில்லனாக நடித்த திலகன் போலீஸ் அதிகாரியாக இருந்த விஜயகாந்தின் மனைவி ரேவதியை கொன்றுவிடுவார். இதன் காரணமாக தன் குழந்தைகளுக்காக போலீசில் இருந்து விலகி இருந்த விஜயகாந்த், பின்னர் தன் மகனின் கடத்தலுக்கு பின் மீண்டும் போலீசில் சேர்ந்து வில்லனை அழிப்பார்.

Next Story

- Advertisement -