Chennai: சென்னை மசாஜ் சென்டரில் சிக்கிய நடிகைகளின் வீடியோ.. கல்லூரி பெண்களை வைத்து வலை விரிக்கும் கும்பல்

Chennai: இப்போது சென்னையில் திரும்பும் பக்கம் எல்லாம் மசாஜ் சென்டர்கள் தென்படுகின்றன. அதில் உரிமம் பெறாத சென்டர்களும் இயங்கி வருகின்றன. அவை அனைத்தும் தற்போது காவல்துறையின் கண்காணிப்பில் வந்திருக்கிறது.

அதில் போலீசாரிடம் சிக்கிய பல தகவல்கள் பகீர் கிளப்பி இருக்கிறது. அதன்படி மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளைஞர்களை குறி வைத்து பலான விஷயங்கள் நடக்கிறது.

இது பற்றி கேள்விப்பட்ட போலீசார் தற்போது சென்னை முழுதும் சோதனை நடத்தி சில வீடியோக்களையும் கைப்பற்றி இருக்கின்றனர். அதில் கோயம்பேடு, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

சென்னையில் பயங்கரம்

அந்த வீடியோக்களில் சினிமா துணை நடிகைகள், கல்லூரி பெண்கள் அவ்வளவு ஏன் சில குடும்ப பெண்கள் கூட அதில் இருப்பது தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். இவர்களின் நோக்கமே அதிக பணம் சம்பாதிப்பது தான்.

அதனாலயே இது போன்ற சென்டர்கள் குறைந்த விலையில் சூப்பர் மசாஜ் என்பது போன்ற விளம்பரங்களை காட்டி இளைஞர்களை கவர்கின்றனர். மேலும் அழகான பெண்கள் மசாஜ் செய்ய காத்திருக்கிறார்கள் என்ற வாட்ஸ் அப் மெசேஜ் கூட அனுப்புவார்களாம்.

அதை பார்த்துவிட்டு வரும் இளைஞர்களுக்கு மசாஜ் செய்யும் இளம் பெண்கள் அவர்களை மயக்கி பணம் சம்பாதித்து விடுவார்களாம். அதேபோல் உதட்டு மசாஜ் இன்னும் பிற மசாஜ் ஆகியவற்றுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுமாம்.

தற்போது கோடையில் இந்த மசாஜ் சென்டர்களுக்கு அதிக பேர் வரத் தொடங்கி இருக்கின்றனர். அதில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சென்டர்கள் இதுபோன்று இளம் பெண்களை வைத்து காசு பார்த்து வருகின்றனர்.

இதையெல்லாம் தற்போது கண்டறிந்த போலீசார் இன்னும் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளனர். விரைவில் மேலும் பல அதிர்ச்சி தகவல்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -