வரதட்சணைக் கொடுமையால் அஜித் பட நடிகைக்கு ஏற்பட்ட துயரம்.. திசைமாறிய வாழ்க்கை

எழுபதுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜெயசித்ரா. இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி, அதன் பிறகு இளம் நடிகையாக இயக்குனர் கே பாலச்சந்தரின் மிகப்பெரிய அறிமுகமாக ஜெயசித்ரா கருதப்பட்டார்.

இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இருந்தார். இந்நிலையில் கதாநாயகியாக நடித்த காலகட்டத்தில் ஜெயசித்ராவும், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சுதாகரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

ஜெயசித்ரா மற்றும் சுதாகர் இருவருமே தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் முன்னணி பிரபலங்களாக திகழ்ந்தனர். எனவே இவர்களுக்கு அந்த காலகட்டத்தில் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருந்தது

எனவே காதலர்களான ஜெயசித்ரா மற்றும் சுதாகர் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்ததும், சுதாகர் ஜெயசித்ராவிடம் வரதட்சனை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயசித்ரா போலீசாரிடம் சுதாகரின் மீது புகார் கொடுத்தார்.

அதன் பிறகு சுதாகர் மற்றும் ஜெயசித்ரா இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டது. பின்பு ஜெயசித்ரா 1983ஆம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அம்ரீஷ் என்ற மகன் இருக்கிறார். இருப்பினும் சினிமா ரசிகர்கள் சுதாகர் மற்றும் ஜெயசித்ரா இருவரும் நிஜவாழ்க்கையில் ஜோடியாக என்று ஆசைப்பட்டனர்.

ஆனால் இவர்கள் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை இதுவரை அறிந்திராத ரசிகர்களுக்கு தற்போது அதற்கான காரணம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராசி படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடித்து இருப்பார் ஜெயசித்ரா என்பது குறிப்பிடத்தக்கது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்