நடிகையிடம் சித்து வேலையை காட்டிய குடும்பம்.. உள்ளாடையை கூட விடாமல் லவட்டிய சோகம்

இளம் நடிகை ஒருவர் அழகாக இருந்த போதிலும் கூட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். கிடைக்கும் ஒன்று, இரண்டு வாய்ப்புகளும் துண்டு, துக்கடா கதாபாத்திரங்களாகவே அமைந்தது. இருந்தாலும் நடிகை அதை ஏற்றுக் கொண்டு நடித்து வந்தார்.

அந்த சமயத்தில் தான் பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் குத்தாட்டம் போடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதிலிருந்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய அந்த நடிகை அந்த படத்தில் இறங்கி ஆட்டம் போட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு ஒரு சில வாய்ப்புகளும் கிடைத்தது.

Also read: அர்த்த ராத்திரியில் காருக்குள் நடந்த அந்தரங்க சேட்டை… இளம் நடிகருடன் ஆண்ட்டி நடிகை செய்த அட்டூழியம்

ஆனால் பெரிய அளவில் வாய்ப்பு வராத காரணத்தால் அக்கடதேசம் சென்ற அவர் அங்கும் சில படங்களில் நடித்தார். இருந்தாலும் அம்மணி எதிர்பார்க்கும் கேரக்டர் மட்டும் கிடைக்கவே இல்லை. இதனால் நொந்து போன அவர் இப்போது பெரும் பிரச்சனை ஒன்றில் சிக்கியுள்ளார்.

அதாவது நடிகை தன்னுடைய வீட்டில் நம்பிக்கையானவர்கள் என்று நினைத்து ஒரு குடும்பத்தை குடி வைத்தாராம். ஆனால் அவர்கள் வாடகை தராமல் இழுத்து அடித்தது மட்டுமில்லாமல் வீட்டில் இருந்த நடிகையின் பணம், நகைகளை கூட ஆட்டையை போட்டு விட்டார்களாம்.

Also read: குடிப்பழக்கத்திற்கு அடிமையான நம்பர் நடிகை.. காதல் என்கின்ற பெயரில் அணு அணுவாய் சீரழிந்த நடிகர்

அதோடு விட்டால் கூட பரவாயில்லை. நடிகையின் காஸ்ட்லி துணிகளோடு அவருடைய உள்ளாடையை கூட விட்டு வைக்காமல் லவட்டி கொண்டு ஓடி விட்டார்களாம். அப்புறம் தான் நடிகைக்கு தெரிய வந்திருக்கிறது அவர்கள் பெரிய மோசடி கும்பல் என்று. இதனால் நொந்து போன நடிகை இப்போது போலீசில் புகார் அளித்துவிட்டு புலம்பி கொண்டிருக்கிறாராம்.

Next Story

- Advertisement -