வீட்டிலேயே விருந்து வைத்த நடிகை.. கையும் களவுமாக மாட்டிய சம்பவம்

அக்கட தேசத்தில் இருந்து வந்த நடிகை ஒருவர் முதல் படத்திலேயே தாரளக் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிரங்கடித்து இருந்தார். இந்த சூழலில் நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக வேறு யுக்தியை கையாள ஆரம்பித்தார். அதாவது பட வாய்ப்புக்காக தான் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் வேறு மாதிரி அணுகி உள்ளனர். ஆரம்பத்தில் நடிகை சாக்குபோக்கு சொல்லி இதை நிராகரித்தாலும் அதன் பிறகு படத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட பல மடங்கு கிடைக்கும் என்பதால் இதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார்.

Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி

மேலும் இதற்காக தனியாக ஹோட்டல், லாட்ஜ் என்று பார்க்காமல் வீட்டிலேயே விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார். முக்கிய புள்ளிகள் நடிகையின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது அக்கம் பக்கத்தினர் இடையே அரசல் புரசலாக பேச ஆரம்பித்து விட்டனர். ஆனாலும் நடிகை கதை குறித்து தான் விவாதம் செய்கிறார் என்று மழுப்பி வந்தார்.

இந்நிலையில் பெரிய இடத்தில் இருக்கும் முக்கிய பிரபலம் ஒருவர் நடிகையுடன் அந்தரங்க உறவில் இருந்துள்ளார். இந்த சமாச்சாரம் நடிகையின் உதவியாளர் கண்ணில் பட்டுவிட்டது. இதுதான் சமயம் என்று அதன் பிறகு இந்த விஷயத்தை வெளியே பரப்பி விடுவேன் என நடிகையை உதவியாளர் மிரட்டி இருக்கிறார்.

மேலும் இந்த விஷயத்தை வைத்தே நடிகையிடம் எவ்வளவு பணம் கறக்க முடியுமோ அவ்வளவு உதவியாளர் வாங்கி விட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் நடிகை பணம் கொடுக்க மறுத்த நிலையில் இந்த விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைத்து விட்டார். பிறகு நடிகையின் பெயர் மற்றும் பெரும்புள்ளியின் பெயரும் மொத்தமாக டேமேஜ் ஆகிவிட்டது.

Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்