எரிகிற நெருப்பில் குளிர் காய்ந்த நடிகை.. சண்டையை மூட்டி விட்டு தோழி கணவனை அடைந்த கேவலம்

gossip-image
gossip-image

எரிகிற நெருப்பை அணைக்கதான் பலரும் பார்க்கும் நிலையில் அது கொழுந்து விட்டு எரியவே காரணமாக இறந்திருக்கிறார் பிரபல நடிகை ஒருவர். அதோடு அதில் குளிர் காய்ந்து குடும்பத்தையே நாசமாக்கி உள்ளார்.

அதாவது நடிகையின் தோழி தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரின் விஷயங்கள் எல்லாமே நடிகைக்கு தெரிய வந்துள்ளது. தோழி அவ்வப்போது வீட்டில் நடக்கும் பிரச்சனையை பகிர்ந்து இருக்கிறார்கள்.

ஆறுதல் சொல்லி கணவனுடன் வாழு என்று கூறாமல் பிரச்சனையை மேலும் மூட்டி விட்டிருக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான நடிகையின் தோழி கணவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு தான் இது எல்லாமே நடிகையின் சதி என்பது தெரியவந்துள்ளது.

அதாவது தோழி அடிக்கடி நடிகையை வீட்டுக்கு அழைத்துள்ளார். இதன் மூலம் கணவருக்கும் நடிகைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தோழி வீட்டில் இல்லாத நேரமும் நடிகை வந்து அவரது கணவருடன் நேரத்தை செலவிட்டிருக்கிறார். இருவரும் பக்கவாக பிளான் போட்டு தோழியை அவராகவே விவாகரத்து கேட்க செய்துவிட்டனர்.

விவாகரத்து ஆன சில மாதங்களிலேயே நடிகையை அந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அப்போது தான் இவரின் சுயரூபம் தோழிக்கு தெரிய வந்துள்ளது. தனது வாழ்க்கை பறிபோகி விட்டதே என தோழிக்கு சாபம் விட்டிருக்கிறார்.

Advertisement Amazon Prime Banner