தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் எப்படியாவது ரசிகர்களிடம் பேரும் புகழும் பெற்று விட வேண்டும் என்பதற்காக சில அல்பதனமான செயல்களை செய்து வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் படம் வெளிவந்த போது இந்த நடிகர் தான் இதனை செய்தார் என பிரபலப்படுத்தி புகழ் தேடிக் கொண்டு பின்பு ஒரு சில வருடங்கள் கழித்து அந்த காட்சியில் நடித்த உண்மையான நபர் ஏதாவது ஒரு பேட்டியில் சொன்ன பிறகு அந்த நடிகர் அல்பதனமாக நடந்து கொண்டது தெரிய வரும். அந்த வரிசையில் தற்போது பல நடிகர்களும் இடம்பிடித்துள்ளனர்.
பாபி சிம்ஹா. அக்னி தேவி படத்தில் பாபி சிம்ஹா அல்பதனமான நடந்துகொண்டதாக பலரும் கூறினர். அதாவது அக்னி தேவி படத்தில் மதுபாலா வில்லியாக நடித்திருப்பார். மதுபாலாவின் கதாபாத்திரம் பாபி சிம்மா விட முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும்.
இதனை தெரிந்துகொண்ட பாபி சிம்ஹா அந்த படத்திற்கு பிரச்சினை செய்துள்ளார். படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதனால் இயக்குனர் பாபி சிம்மா காட்சிகளை டு போட்டுட்டு லாங் ஷாட் எடுத்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் முடித்தனர். இதற்காக பாபி சிம்ஹா கோர்ட்டு வரை சென்றார்.
வெங்கட் பிரபு. அஜித் நடிப்பில் 50வது படமாக வெளியானது மங்காத்தா. இப்படம் வெளிவந்தபோது படக்குழுவினர் பலரும் அஜித் தான் பைக் ஸ்டன்ட் காட்சி செய்ததாக கூறினார்கள்.
![ajith kumar](http://192.168.1.7/cinemapettai/wp-content/uploads/2021/03/ajithkumaraa.jpg)
ஆனால் உண்மையில் அஜித் பைக் ஸ்டண்ட் செய்யவில்லை உண்மையாக ரேஸ் ஓட்டக்கூடிய அபிஷேக் மற்றும் செந்தில் என்பவர்கள் பிரபலபேட்டி ஒன்றில் மங்காத்தா படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சி தாங்கள் செய்ததாக வெளிப்படையாக கூறினார்கள். அதன்பிறகுதான் படக்குழுவினர் படத்தை புரோமோஷன் செய்வதற்காக அல்பதனமாக நடந்து கொண்டது தெரியவந்தது.
7ஜி சிவா. அஜித் கஜா புயலின் போது 5 கோடி கொடுத்ததாக மிகப்பெரிய ஒரு புழு புழுவினார். ஆனால் அஜித் உண்மையிலேயே 15 லட்சம் தான் கொடுத்துள்ளார். அஜித் உடைய பெயரை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்.
![ajith kumar](http://192.168.1.7/cinemapettai/wp-content/uploads/2021/03/ajithkumar.jpg)
ஆனால் உண்மையாகவே அஜித் அனைவருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பலரும் இதனை தவறாக பயன்படுத்தி அரசியல் செய்திகளை வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு பிறகு உண்மையான தகவல் வெளியானது.