சூர்யாவுக்காக பழைய படத்தின் டைட்டிலை சுட்ட பாண்டியராஜ்.. யோவ் நீ பலே கில்லாடியா!

தமிழ் சினிம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதனால் தற்போது சூர்யா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெயரிடாத படத்தில் நடித்து வந்தார் ஆனால் நேற்று சூர்யா நடிப்பில் உருவான சூர்யா 40 படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டது.

படத்தின் அறிவிப்பை வெளியிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் ஆனால் ஒரு சில ரசிகர்கள் இப்படத்தினை பற்றிய கதை மற்றும் படத்தின் தலைப்பினை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

etharkkum thuninthavan
etharkkum thuninthavan

அதாவது சூர்யா எதற்கும் துணிந்தவன் என்று தனது படத்திற்கு தலைப்பு வைத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் இது ஏற்கனவே ஒரு நடிகர் நடித்த படத்தின் தலைப்பு தானே என கூறியுள்ளனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் தலைப்பை வைத்து சூரியாவின் அப்பா ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் பாண்டியராஜ் சூர்யா அப்பா சிவகுமார் நடித்த படத்தின் டைட்டிலை அலேக்காக தூக்கி அப்படியே மகனுக்கு வைத்து விட்டார் என ஒரு சில ரசிகர்கள் இணையதளங்களில் கூறிய வருகின்றனர். படத்தின் டைட்டிலே காபினா படத்தின் கதையும் காப்பி ஆகத்தான் இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்