மீண்டும் சிம்புக்கு வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பு நிறுவனம்.. முதல்ல பட்ட அடியின் தழும்பே ஆறல

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் தற்போது தொடர்ந்து பல தயாரிப்பாளரும் சிம்புவை தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் சிம்பு ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

சிம்பு நடிப்பில் உருவான வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதனால் லைக்கா நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு லைக்கா தயாரித்த அனைத்து படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

ஆனால் தற்போது சிம்பு நடிப்பில் மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் மீண்டும் சிம்புவை வைத்து படத்தை தயாரிக்க லைக்கா முடிவு செய்துள்ளனர். அதாவது சிம்புவை வைத்து சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

மேலும் சிம்புவுக்கு நெருங்கிய நண்பர் சுதா கொங்கரா என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும், அதுமட்டுமில்லாமல் சுதா கொங்கரா எழுதிய கதை சிம்புவிற்கு பிடித்துப்போக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்காக சிம்புவிற்கு 25 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநாடு படம் வெற்றியால் கண்டிப்பாக சிம்பு நடிக்கும் அடுத்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால்தான் லைக்கா நிறுவனம் சிம்பு வைத்து தயாரிக்க முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் முதல் படம் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் சிம்பு நடிக்கும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் முழுவதுமாக நம்பியுள்ளது. மேலும் இப்படத்தின் வெற்றியை வைத்துதான் சிம்புவின் சினிமா வாழ்க்கையும்,  லைக்கா நிறுவனத்தின் வெற்றியும் இருப்பதாக கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்