மீண்டும் கழுத்தைச் சுற்றிய பிரச்சனை.. சிம்புவை டீலில் விட்ட பிரபல தயாரிப்பாளர்

பல சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களிலிருந்து மீண்ட நடிகர் சிம்பு தற்போது தான் தனக்கான சரியான பாதையை தேர்வு செய்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இனிமேல் சிம்பு படங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என நினைத்துக் கொண்டிருக்கும்போது புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சிம்பு மற்றும் கெளதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு படத்தில் பணிபுரிய உள்ளனர்.

அப்படத்திற்கு நதியினிலே நீராடும் சூரியன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும், தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் கிரித்தி சனோன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் திருச்செந்தூரில் நடக்க இருந்த நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு தர வேண்டிய பணத்தை சிம்பு தரும் வரை அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம்.

ishari k ganesh
ishari k ganesh

இந்நிலையில் இந்த பிரச்சனையில் ஈடுபட விரும்பாத தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரச்சனையை சிம்புவே முடித்துக் கொள்ளட்டும் என சொல்லிவிட்டாராம். மேலும் பிரச்சனை முடிந்த பின்னர் படப்பிடிப்பைத் தொடங்கிக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்