பிரியங்கா சோப்ராவை ஒட்டு துணி இல்லாமல் நிற்க சொன்ன இயக்குனர்.. சமாதானப்படுத்திய பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவிலாவது அவ்வப்போது தயாரிப்பாளர்கள் நடிகைகள் பிரச்னை ஏற்படும். ஆனால் பாலிவுட் உலகில் தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர் வரை அனைவருமே தன்னுடன் நடிக்கும் நடிகையை ஒரு முறையாவது அனுபவித்து விட வேண்டும் என்ற மோசமான சிந்தனை கொண்டவர்கள்.

இதனால் அடிக்கடி பஞ்சாயத்து நடக்கும். அதுமட்டுமில்லாமல் படத்தில் நடிக்க வரும் நடிகைகள் போதை பழக்கத்திற்கு உட்படுத்துவது, இரவு பார்ட்டிகளுக்கு அழைத்துச் செல்வது என சகலமும் உண்டு. இந்நிலையில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நாயகியாக மாறி தற்போது பாலிவுட் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் இப்படி ஒரு நிலைமை நடந்துள்ளதாம்.

ஒரு பெரிய பாலிவுட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட பிரியங்கா சோப்ராவை அழைத்துள்ளனர். மிகவும் கவர்ச்சி பாடல் என்பதால் அதில் குறிப்பிட்ட அளவு உடையை குறைத்து ஆட்டம் போட சம்மதித்தாராம் பிரியங்கா சோப்ரா. அந்த பாடலின் கடைசியில் பிரியங்கா சோப்ரா தனது உடம்பில் உள்ள ஒவ்வொரு துணியையும் கழட்டுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்ததாம்.

priyanka-chopra-cinemapettai-01
priyanka-chopra-cinemapettai-01

அப்போது அந்த பாட்டு நீளமாக இருந்ததால் இயக்குனரிடம் சென்று, இவ்வளவு நீளமாக இருந்தால் கண்டிப்பாக இறுதியில் ஒட்டு துணி இல்லாமல் தான் நிற்கவேண்டும், வேறு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என கூறினாராம்.

அந்த இயக்குனரும் ஸ்டைலிஸ்ட் இடம் கேளுங்கள் என கூறிவிட்டாராம். பின்னர் அதே ஸ்டைலிஸ்ட் இடம் இயக்குனர், என்ன பண்ணுவீங்களோ தெரியாது, பாடலின் கடைசியில் குறைந்தது அவருடைய உள்ளாடையாவது தெரியவேண்டும் என பிரியங்கா சோப்ரா முன்பே கூறினாராம்.

இதனால் டென்ஷனான பிரியங்கா சோப்ரா உடனடியாக அந்த படத்திலிருந்து விலக முடிவு செய்தாராம். இருந்தாலும் அந்த தயாரிப்பாளர் பிரியங்கா சோப்ராவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு நடிகர் சல்மான்கானிடம் முறையிட்டு இந்த பிரச்சனையை முடித்து வைத்தாராம்.

Next Story

- Advertisement -