வெறும் பனியனில் அலறவிட்ட பிரியா பவானி சங்கர்.. கும்முனு வெளிவந்த புகைப்படம்

செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக உருவானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதுமட்டுமின்றி ஒரு சில நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

சின்னத்திரை நடிகையாக இருக்கும் போதே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இந்த புகழ் மூலம் இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக தடம் பதித்தார்.

அறிமுகமான முதல் படமே அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கடை குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம் என அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட 5 படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இன்னும் 5 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தவிர ஒரு சில புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. வெறும் பனியனில் ரசிகர்களை அலறவிட்ட புகைப்படத்தை தற்போது பதிவிட்டு உள்ளார். இவர் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

priya bhavani shankar
priya bhavani shankar
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்