கேரவனுக்குள் சிகரெட், சரக்கு நாற்றம்.. 24 மணி நேரமும் போதையில் இயக்குனரின் முன்னாள் மனைவி

பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவி 24 மணி நேரமும் போதையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் சரக்கு வாங்கி கொடுத்தே ஒரு வழியாகிவிட்டார்களாம்.

தமிழ் சினிமாவில் அந்த ஜீனியஸ் இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் அந்த நடிகை. முதல் படமே தாறுமாறு ஹிட் அடித்த நிலையில் தொடர்ந்து இளம் நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவரது பார்வையையும் ஈரத்தார்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுடனும் மற்ற மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தார். ஆனால் எவ்வளவு வேகத்தில் உயர்ந்தாரோ காலப்போக்கில் அதே வேகத்தில் சரிந்து விட்டார் அம்மணி. அதற்கு காரணம் போதைக்கு அடிமையானது தானாம்.

வடக்கிலிருந்து வந்த அந்த நடிகைக்கு ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் குடி பழக்கம் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஜீனியஸ் இயக்குனரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக நினைத்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அந்த நடிகை குடியும் கூத்துமாக இருந்த நிலையில் அந்த ஜீனியஸ் நடிகருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.

அதன் பிறகு அந்த இயக்குனர் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் நடிகையின் நிலமை அப்படி இல்லையாம். நாளுக்கு நாள் குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டதாம். முன்னரெல்லாம் ரூம் போட்டு குடித்துக் கொண்டிருந்த அந்த நாயகி தற்போது படப்பிடிப்பில் தனக்கு கொடுத்த கேரவனுக்குள்ளேயே ஆடை அவிழ்ந்து விழுவது கூட தெரியாமல் போதையில் கிடக்கிறாராம்.

போதாக்குறைக்கு கேரவனுக்குள் புகைத்து தள்ளுகிறாராம். இதனால் சீன் சொல்ல போகவே அஸிஸ்டென்ட் டைரக்டர்கள் சங்கடப்படுகிறார்களாம். படத்தில் சம்பாதிக்கும் மொத்தத்தையும் குடியிலே அழிக்கிராறாம் அம்மணி. மொடா குடிகாரர்கள் கூட இந்த நடிகையுடன் போட்டி போட முடியாது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்