நடிகைகளிடம் தில்லுமுல்லு செய்து அசிங்கப்பட்ட நடிகர்.. எப்படி பிரண்ட்ஸ் மூஞ்சில முழிக்க என சங்கடப்படுகிறாராம்

ஒரு சில மாதங்களாக இந்த குறிப்பிட்ட நடிகர் பெண்கள் விஷயத்தில் பல சில்மிஷங்கள் செய்ததாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதன் காரணமாக அந்த நடிகரின் பெயர் ஏகபோகத்துக்கும் டேமேஜ் ஆன நிலையில் தற்போது வீட்டை விட்டு வெளியே வரவே சங்கடப்படுகிறாராம்.

ஒரு காலத்தில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. அப்போதெல்லாம் ஆர்யாவை சுற்றி நடிகைகள் கூட்டமும் பெண்கள் கூட்டமும் அலை மோதும். அப்படி ஒரு ஆணழகன் போல் வலம் வந்தவர் அப்போது அதை பெருமையாக நினைத்தார்.

செல்லும் இடங்களில் எல்லாம் நடிகைகளை கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என சேட்டை செய்து வந்தார். அப்போது பேச்சிலர் என்பதால் அதெல்லாம் அவரை பாதிக்கவில்லை. ஆர்யாவின் திருமணத்திற்கு பிறகு மீண்டும் அவருடைய பழைய சில்மிஷங்கள் உயிர்பெற தொடங்கியுள்ளன.

arya-cinemapettai
arya-cinemapettai

அந்த வகையில் திருமணம் செய்து கொள்வதாக சில பெண்களை ஏமாற்றியதாக தொடர்ந்து ஆர்யா மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் பல பெண்களிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் செய்திகள் வந்தன. இது ஆர்யாவை மனதளவில் மிகவும் பாதித்து விட்டதாம்.

இதன் காரணமாக தற்போது வீட்டை விட்டு வெளியில் வராமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் முன்னர் போல் தன்னுடைய நண்பர்கள் பார்ட்டிக்கு கூப்பிட்டால் கூட வெளியில் செல்வதில்லையாம். இவ்வளவு ஏன் அவருடைய போனில் இருந்த பழைய நடிகைகளின் நம்பரை எல்லாம் டெலீட் செய்து விட்டாராம்.

ஒரு காலத்தில் பெண்கள் தான் உலகம் என்று வாழ்ந்தவர் தற்போது பெண்களை கண்டாலே அஞ்சி ஓடும் நிலைமைக்கு ஆளான ஆர்யாவை கோலிவுட் வட்டாரம் பரிதாபமாக பார்த்து வருகிறது. எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே என்று கவலைப்படுகிறார்களாம்.

Next Story

- Advertisement -