இரட்டை சகோதர்களாக மாறிய பா ரஞ்சித், மாரி செல்வராஜ்.. கெத்தாக வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் வெளியான படங்களில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றன. அதுவும் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளராகும் ஒரு சில படங்களை தயாரித்து அதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இதன் மூலம்தான் இவர் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ஒரு சில படங்களில் பணியாற்ற முடிவு செய்தனர். தற்போது மாரிசெல்வராஜ் பா ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரு நட்பு சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

pa ranjith
pa ranjith

எந்த விழாக்கள் சென்றாலும், எந்த மேடை நிகழ்ச்சிக்கு சென்றாலும் இருவருமே ஒன்றாக செல்வது என தனது நட்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் ஒரே மாதிரி உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இவர்கள் இருவரும் விழா நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது தான் இப்புகைப்படத்தை எடுத்துள்ளனர் என கூறி வருகின்றனர். மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்