ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு வந்த நீலிமா.. தங்க நிறத்தில் தகதகவென ஜொலிக்கும் புகைப்படம்

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கு  பேத்தியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், பாண்டவர்பூமி போன்ற சில படங்களில் துணை வேடங்களில்  நடித்திருக்கிறார்.

மேலும் நீலிமாராணி நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை நீலிமா ராணி தான் தயாரித்து கொண்டிருக்கிறாராம்.

அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நீலிமாராணி நடித்திருக்கிறாராம்.

இந்தநிலையில் நீலிமா ராணி தற்போது தன்னுடைய  சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் அந்தப் புகைப்படத்தில் பார்ப்போர் அனைவரையும் தனது கண்களால் சொக்க வைத்துள்ளார் நீலிமா.

neelima-new-design-blouse-01
neelima-new-design-blouse-01

அதாவது வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே காமனான விஷயம் என்றால் அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான்.

பலரும் பல வகைகளில் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் விளம்பரங்களை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் புது மாடல் ஜாக்கெட் ஒன்றை விளம்பரப்படுத்தும் வகையில் நீலிமா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

neelima-new-design-blouse
neelima-new-design-blouse
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்