நெப்போலியனின் கண்ணீர் கதை.. இந்த மனுசனுக்குள்ள இவ்வளவு கஷ்டங்களா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வில்லன் என்றால் நெப்போலியன் ஞாபகத்திற்கு வருவார். அந்த அளவிற்கு அவரது நடிப்பும், உடல் தோற்றமே காரணம்.

அதன்பிறகு படங்களில் ஹீரோ மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதிலும் தசாவதாரம் படத்தில் இவர் “வாய்ப்பேச்சில் வைனவர்” தான் எனக் கூறும் வசனம் எல்லாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

நெப்போலியனின் இயற்பெயர் குமரேசன். இவர் தெலுங்கு ரெட்டியார் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் பாரதிராஜா நெப்போலியனை சினிமாவிற்கு அழைத்து வரும்போது குமரேசன் என்ற பெயரை மாற்றி நெப்போலியன் என்ற பெயர் வைத்துள்ளார்.

அப்போது நெப்போலியனுக்கு இந்த பெயர் பிடிக்கவில்லையா எனக்கு ஸ்டைலாக பெயர் வையுங்கள் என பாரதிராஜாவிடம் கேட்டுள்ளார். ஆனால் பாரதிராஜா இந்த பெயர் உனக்கு சரியாக இருக்கும் என கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.

nepolian
nepolian

நெப்போலியனின் பெரிய பையன் தனுஷ் சிறுவயதில் மஸ்குலர் டிராபி என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது உடம்பிலுள்ள தசைகள் ஆங்காங்கு செயல்படாதம் அவருக்காக அமெரிக்காவில் ட்ரீட்மெண்ட் எடுக்க சென்றுள்ளார்.

பின்பு அப்படியே அமெரிக்காவில் வீடு வாங்கி செட்டிலாகி விட்டார். ஜீவன் டெக்னாலஜி என்ற ஐடி கம்பெனி ஒன்றை வைத்திருக்கிறார். 800க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். எம்பி, எம்எல்ஏ என திமுகவின் அனைத்து பதிவுகளையும் வகித்தவர். தற்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்