கடத்தல் வழக்கில் சிக்கிய வாரிசின் பெயர்.. கச்சிதமாக காய் நகர்த்தும் நடிகர்

பாலிவுட்டில் கடத்தல் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் இப்போது கோலிவுட்டிலும் பெரிய பிரபலங்கள் இந்த வழக்கில் சிக்கி வருகிறார்கள். அதன்படி தயாரிப்பாளர் ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள நிலையில் அதில் நடிகைகளின் பெயர்களும் இடம் பெற்று இருக்கிறது.

அந்த வகையில் வாரிசு நடிகை ஒருவர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகளை காப்பாற்றுவதற்காக அவரது தந்தை முக்கிய முடிவு எடுத்து இருக்கிறார். அதாவது தனக்காக ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருந்தார்.

இப்போது மகளுக்காக அதை உடைத்துள்ளார். அதாவது தனது மகளுக்காக பகைவர் கூட்டம் என்று தெரிந்தே அவர்களுடன் சகவாசம் வைத்து உள்ளார். காரணம் இப்போது அவர்களிடம் தான் பதவி மற்றும் அதிகாரம் இருக்கிறது. அவர்கள் நினைத்தால் இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாம்.

ஆகையால் தனது மகளையும் இந்த வழக்கில் சிக்கினால் சமூகமாக வெளியே கொண்டு வந்து விடலாம் என்று நடிகர் இவ்வாறு செய்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் நடிகையின் பெயரே வெளியே வராமலும் இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்திடலாம்.

இந்த ஆலோசனை எல்லாம் நடிகரின் மனைவி தான் கூறி இருக்கிறார். நடிகரும் வேறு வழி இல்லாமல் மகளின் சொந்த வாழ்க்கை மற்றும் திரை வாழ்க்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விபரீத முடிவு எடுத்து இருக்கிறார். இதனால் அவரது மகளுக்கு விமோசனம் கிடைத்தாலும் நடிகர் என்னென்ன பிரச்சனை சந்திக்கப் போகிறார் என்பது பிறகு தான் தெரிய வரும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்