லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமானது பொங்கலுக்கு ரிலீசாகி ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்தது. இருப்பினும் படம் ரிலீஸ் ஆகும்போது 100% பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்ட தமிழக அரசு,
அதன் பின்பு 50% பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவையும் வெளியிட்டது. இந்த தகவலால் திரையரங்கு உரிமையாளர்களும், பார்வையாளர்களும் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டாவது வாரமே அமேசான் தளத்தில் மாஸ்டர் வெளியானதும் மீண்டும் 100% பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது தளபதியின் மாஸ்டர் படத்தை திரையரங்கில் ஓடவிடாமல் கெடுப்பதற்காக, பின்புலத்தில் அரசியல் சித்து விளையாட்டு அரங்கேறியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
![](http://192.168.1.7/cinemapettai/wp-content/uploads/2021/02/master-politics.jpg)
இருப்பினும் அதையெல்லாம் அசால்டாக தூக்கி வீசிய தளபதியின் மாஸ்டர் திரையரங்குகளில் ஏகப்பட்ட வசூலை வாரி குவித்தது. அதன்பிறகு ஓடிடி-யிலும் 66 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிச் சென்றுள்ளது.
இருப்பினும் விஜயின் மீது ஏன் இவ்வளவு காண்டா? இல்ல பயமா? என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.