பதக்கம் வென்ற மீராபாய்யின் ஏழ்மையான புகைப்படத்தை வெளியிட்ட மாதவன்.. அரசு அறிவித்த உயர்ந்த பதவி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மாதவன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வரவேற்பு பெற்று வருகின்றன அதனால் தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான விக்ரம் வேதா மற்றும் இறுதிச்சுற்று ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து ராக்கெட்ரி எனும் படத்தில் நடித்துள்ளார் சமீபகாலமாக ஏற்படுத்திய பற்றி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தற்போது மாதவன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஒலிம்பிக் போட்டியில் பலு தூக்கும் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு புகழ்ந்து பாராட்டி உள்ளார். அதாவது மீராபாய் சானு தன் குடும்பத்தினருடன் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் புகைப்படத்தை பதிவிட்டு எளிமையை பாராட்டுவதாக கூறியுள்ளார்.

mirabai sanu
mirabai sanu

இதனை பார்த்த ரசிகர்கள் மாதவன் சொன்னதையெல்லாம் பொருட்படுத்தாமல் புகைப்படத்தில் மீராபாய் சானு எளிமையை பார்த்து ரசிகர்கள் பலரும் தற்போது அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர். மேலும் இப்போது எப்படி இருக்கிறாரோ இதே போலவே எப்போதும் இருக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பல பதக்கங்களை வென்று வருகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்றும் பல வீராங்கனைகளுக்கும் இந்திய ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பதக்கம் வென்றதால் அவருக்கு காவல்துறையில்( Superintendent of Police ) பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -