சில்லுனு, ஜிகர்தண்டா பார்ட் 2 ரெடி.. ஆனா, சேதுவாக நடிக்க போவது பாபி சிம்ஹா இல்லயாம்

2014ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் பாபி சிம்ஹா, நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. மதுரையில் உள்ள பிரபல ரவுடியான பாபி சிம்ஹாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிடும் கதாநாயகன் சித்தார்த் அப்போது ஏற்படும் சிக்கல்களை சமாளிக்கும் விதமும், பாபி சிம்ஹாவின் மாஸான நடிப்பு, நாயகி லக்ஷ்மி மேனனின் சாந்தமாக கதாநாயகனிடம் தன் ஒருதலை வெளிப்படுத்தும் விதங்கள் இவைகள் யாவும் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண்களாக அமைந்தது.

அதுமட்டுமின்றி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். மேலும் சிறந்த எடிட்டிங் தீர்வுகாண தேசிய விருதை விவேக் ஹர்ஷன் வென்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். தான் இயக்கும் திரைப்படங்களில் தன் நெருங்கிய நண்பரான பாபி சிம்ஹாவை முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்.

இப்படத்தின் வெளியீட்டின்போது கார்த்திக் சுப்புராஜ்விற்கும் தயாரிப்பாளர் கதிரேசனும் இடையே ஒரு சில சண்டைகள் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஹிந்தி ரைட்ஸ் உரிமையை விற்றதினால் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கதிரேசன் இணைத்து வைக்க அவரது நண்பர்கள் முயற்சி செய்துள்ளனர்.

தற்போது இருவரும் சமாதானமாகி உள்ளதால் ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ்க்கு பாபி சிம்மா நெருங்கிய நண்பர் என்பதால் ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடிப்பார் என கூறி வருகின்றனர். அதாவது பாபி சிம்ஹாவுடன் ஜிகிர்தண்டா இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

அப்போதிலிருந்தே பாபி சிம்மா இரண்டாம் பாகத்தில் நான்தான் ஹீரோ என நினைத்துள்ளார். ஆனால் தற்போது ஹீரோ மாற்றியதாக பாபி சிம்மாவிடம் கூறியதால் கார்த்தி சுப்புராஜ் மீது கோபமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இருவருக்கும் ஒரு சில சண்டைகள் ஏற்பட்டு வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் இருப்பார்கள் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்