Kamal: கோடம்பாக்கத்தில் தலை விரித்து ஆடும் மட்டமான கலாச்சாரம்.. பாலிவுட் ரேஞ்சுக்கு கமல் நடத்திய பார்ட்டி

Kamal: வார இறுதி வந்து விட்டாலே ஈசிஆர் பக்கம் பார்ட்டி கலை கட்டி விடும். அதிலும் திரை பிரபலங்கள் காரணமே இல்லாமல் பார்ட்டிகள் நடத்துவதுண்டு. இதில் தான் பல விஷயங்கள் அரங்கேறும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை இது ரகசியமாக இருந்தது. ஆனால் இப்போது சோஷியல் மீடியா பெருகிவிட்ட காலகட்டத்தில் அனைத்தும் அம்பலமாகி வருகிறது.

அப்படித்தான் பாடகி சுசித்ரா, கமல் கொடுத்த பார்ட்டி குறித்து அதிர வைக்கும் உண்மையை பகிர்ந்துள்ளார். உலக நாயகன் அடிக்கடி பார்ட்டி வைப்பார் என்பது அவ்வப்போது மீடியாவில் செய்தியாக வந்திருக்கிறது.

பார்ட்டி கலாச்சாரம்

ஆனால் அந்தப் பார்ட்டியில் தடை செய்யப்பட்ட ஒரு வஸ்து கட்டாயம் இருக்குமாம். வெள்ளி தாம்பாளத்தில் வைத்து சப்ளை செய்யப்படும் அந்த பொருளை வேண்டாம் என்று சொன்னதற்காகத் தான் என் பெயரை டேமேஜ் செய்து விட்டார்கள்.

இதுபோன்ற பார்ட்டி கலாச்சாரம் இப்போது தமிழ் பிரபலங்கள் மத்தியில் சகஜம் ஆகிவிட்டது. இதை சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் தடுக்க பெரும் முயற்சி செய்தார்கள் என சுசித்ரா குறிப்பிட்டுள்ளார்.

இது பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அதிலும் ஒரு அரசியல் தலைவராகவும் சினிமாவில் மூத்த கலைஞராகவும் இருக்கும் கமல் இப்படியெல்லாம் பார்ட்டி வைப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாலிவுட்டில் தான் இது போன்ற பார்ட்டிகளை நாம் கேள்விப்பட்டிருக்கும். ஆனால் இந்த கலாச்சாரம் கோலிவுட்டிலும் தலை விரித்து ஆடுவது நம்ப முடியாத அதிர்ச்சியாக இருக்கிறது.

Next Story

- Advertisement -