அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இளையராஜா. இவருக்கு திருமணமாகி கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என 3 வாரிசுகள் உள்ளனர். 2011 ஆம் ஆண்டு இளையராஜாவின் மனைவி இறந்து விட்டார் என அனைவரும் தெரிந்த ஒன்று தான்.
இளையராஜாவின் நிஜ வாழ்க்கையில் காதல் தோல்வி ஏற்பட்டுள்ள சம்பவத்தை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனேன்றால் பல ஆயிரம் காதல் பாடல்களை இசை அமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இளையராஜா.
அவருக்கே காதல் தோல்வி என்ற சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது 1970ஆம் ஆண்டு காயத்ரி வீணா என்ற பெண்ணை விழுந்து விழுந்து காதலித்தாரம். காயத்ரி வீணை வாசிப்பதிலும் கை தேர்ந்தவர் என்பதால் ஜெயலலிதா நேரடியாக காயத்ரியை vice-chancellor ஆப் தமிழ்நாடு மியூசிக் என்ற பொறுப்பை அவர் கொடுத்தாராம்.
இளையராஜாவின் காதல் தொல்லை தாங்க முடியாமல், அவர் சமுகத்தை சேர்ந்த கப்பலில் உயர் அதிகாரியாக வேலைபார்த்து ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழகத்திற்கு வராமல் ஏழு வருடங்கள் கப்பலில் தனது வாழ்க்கையை கழித்து உள்ளாராம்.
![gayathri-veena](http://192.168.1.7/cinemapettai/wp-content/uploads/2021/02/gayathri-veena.jpg)
அந்த அளவிற்கு இளையராஜாவின் டார்ச்சர் இருந்ததாக கோலிவுட் வட்டாரத்தின் செய்தி தொடர்பாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் இப்படி ஒரு காதல் தோல்வி ஏற்பட்டால் தான் அதில் உள்ள அனுபவத்தின் மூலம் இசை அமைக்க முடியும், இவ்வளவு கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதை கவர முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.