சலிப்படைய செய்த விஜய் சேதுபதி.. பரிதாபத்திற்குரிய நிலைமையில் எடுத்த முடிவு

விஜய் சேதுபதி ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டரில் அசத்தி வருகிறார். அதுமட்டுமின்றி கைவசம் 12 படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். வருடத்திற்கு அசராமல் 18 படங்கள் வரை நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி கேமியோ ரோல் மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களில் வேறு நிறைய படங்கள் கமிட் ஆகி இருக்கிறார். இப்படி போய்க்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி திடீரென்று பல சிக்கல்களை சந்திக்க ஆரம்பித்தார்.

சங்க தமிழன், துக்ளக் தர்பார், அனபால் சேதுபதி என வரிசையாக படங்கள் பிளாப். இப்பொழுது அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல திட்டங்களை தீட்டி வருகிறார்.

அதில் ஒரு திட்டமாக, ஒரே முகத்தை ஓயாமல் பார்த்தால் மக்களுக்கு சற்று சலிப்பு தட்ட தான் செய்யும் . இதனை புரிந்து கொண்டார் விஜய் சேதுபதி.

தற்போது ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளார். இனிமேல் இந்தத் துண்டு, துக்கடா கேரக்டரில் நடிக்கப்போவதில்லை. வருடத்திற்கு கம்மியான படங்கள் என்றாலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதாக முடிவு எடுத்துள்ளார்.

அதேபோல் இனிமேல் முழுவதும் ஹீரோ அவதாரம் மட்டும்தான் என்ற முடிவையும் எடுத்துள்ளாராம். இவர் எடுத்த முடிவு நல்ல முடிவு ஓயாமல் முகத்தை படத்தில் காட்டாமல் இருந்தாலே இவருக்கு உன்டான எதிர்பார்ப்பு எகிறி விடும் என்று இவரதுநல விரும்பிகள் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்