கொரோனாவால் இறந்து விட்டால் சொத்துக்களை சகோதரிகளுக்கு பிரித்துக் கொடுங்கள். இமெயில் அனுப்பிய ட்ரீம்ஸ் நாயகி.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனுஷ் பட நாயகி தான் இறந்து விட்டால் தன் சொத்துக்களை சகோதரிகளுக்கு பிரித்து கொடுக்குமாறு இமெயில் அனுப்பியுள்ளார். தனுஷின் ட்ரீம்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பரூக் யாதவ்.

பரூக் யாதவ் ட்ரீம்ஸ், புலன் விசாரணை-2 ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளார். மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை கூட இல்லாமல் போராடியுள்ளார்.

Paru-Yadav1-Cinemapettai.jpg
Paru-Yadav1-Cinemapettai.jpg

தொடர்ந்து 12 நாட்களாக அதிக காய்ச்சலில் அவதிப்பட்ட அவர் மூன்றாவது மாடியில் உள்ள தனது ரூமில் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி சுவையும் மணமும் தெரியாமல் 20 நாட்களாக உணவு சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு உள்ளார்.

இத்தகைய சூழலில் இருந்து தான் மீண்டு வருவது கடினம் எனவும் இறந்துவிடுவேன் எனவும் எண்ணி அவருடைய மருத்துவருக்கு ஈமெயில் அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி அவருடைய சொத்துக்களை தன் இரண்டு சகோதரிகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தாராம்.. தற்போது அதனை நினைத்து தன் சகோதரிகளுடன் வருத்தப்பட்டு கொண்டாராம்.

 

Next Story

- Advertisement -