பருத்திவீரன் போல பஞ்சாயத்தான உத்தம வில்லன்.. ஆண்டவரின் வாக்கை நம்பி நொந்து நூடுல்சான லிங்குசாமி

Actor Kamal: கமல் எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேடி தேடி நடிப்பார். அப்படி அவருடைய கனவு படமாக உருவானது தான் உத்தம வில்லன்.

thirupathy-brothers
thirupathi-brothers

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படம் வணிக ரீதியாக நஷ்டத்தை சந்தித்தது.

அதனால் அதற்கு ஈடாக வேறு ஒரு படத்தில் நடித்து தருவதாக கமல் வாக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் இப்போது வரை அவர் அதை காப்பாற்றவில்லை.

ஆனாலும் லிங்குசாமி ஆண்டவருக்காக காத்திருக்கிறார். மேலும் ஒரு பேட்டியில் அவர் நான் கமல் சாரை ரொம்பவும் மதிக்கிறேன்.

ஆண்டவரை நம்பி காத்திருக்கும் லிங்குசாமி

அதனால் தான் இந்த படம் எடுக்கும் போது நாங்கள் எதிலும் தலையிடவில்லை. ஆனால் படம் தயாரான பிறகு பார்த்துவிட்டு பல மாற்றங்களை சொன்னோம்.

கமல் சாரும் முதலில் சரி என்று சொல்லிவிட்டு பிறகு அதை செய்யவில்லை. ஒரு வேளை சில விஷயங்களை மாற்றி இருந்தால் படம் வெற்றி அடைந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வலைப்பேச்சு என்ற யூடியூப் சேனல் உத்தமவில்லன் படம் வெற்றி என லிங்குசாமி கூறியதாக தகவல் வெளியிட்டுள்ளனர். அதை அவர் முற்றிலுமாக மறுத்ததோடு பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் இப்படித்தான் பருத்திவீரன் பட பஞ்சாயத்து பூதாகரமாக வெடித்தது. அது தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் உத்தம வில்லன் விவகாரம் புது பஞ்சாயத்தாக மாறி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்