தோல்வி பயத்தால் பாலிவுட் பிரபலத்தை களமிறக்கும் ரஜினி.. செதில் செதிலாக செதுக்கும் நெல்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் ரஜினியுடன் இணைய இருப்பதுதான்.

மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். எந்திரன் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் மீண்டும் ரஜினியுடன் இணைந்துள்ளார். அதேபோன்று படையப்பா திரைப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் ரஜினியுடன் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் மற்றொரு பாலிவுட் பிரபலமும் இணைந்திருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் பியூஸ் ஜெயின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் இவர் ஒரு காஸ்டிங் டைரக்டர் ஆகவும் இருக்கிறார். அந்த வகையில் அவருடைய குழுவினர் திரைப்படங்கள், விளம்பரங்கள், வெப் தொடர்கள் போன்ற அனைத்திற்கும் ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்யும் முறையை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு படம் உருவாவதற்கு தேவையான நடிகர், நடிகைகள் முதல் விஷுவல் எபெக்ட், எடிட்டிங் போன்ற பலவற்றிற்கும் திறமையான ஆலோசனையை இந்த நிறுவனம் வழங்குகிறது. அந்த வகையில் பியூஸ் ஜெயின் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளது படத்திற்கு ஒரு பிளஸ்ஸாக அமைந்துள்ளது.

ஏனென்றால் நெல்சன் திலீப் குமார் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இந்தப் படத்தை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு வெற்றி திரைப்படமாக கொடுத்தே தீர வேண்டும் என்ற முடிவில் இருக்கின்றனர். அதற்காகத்தான் அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நெல்சன் இதில் சொதப்பி விடக்கூடாது என்பதற்காகத்தான் ரஜினி பாலிவுட் பிரபலத்தை களம் இறக்கி இருப்பதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்