பணத்தை வெறுத்து ஒதுக்கும் ஏ ஆர் ரகுமான்.. அதற்கு மட்டுமே சந்தோஷப்படும் ஆஸ்கர் நாயகன்

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப இசை அமைப்பதில் ஒவ்வொருத்தரும் தங்களுக்குரிய இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். அப்படி முதலிடத்தில் இருந்தவர் இளையராஜா. அவருக்குப்பின் அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் ஏ ஆர் ரகுமான். இப்பொழுது அவரை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்திருப்பவர் அனிருத்.

ஏ ஆர் ரகுமான் தமிழில் மட்டுமில்லை பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று தனது கொடியை பறக்க விட்டவர். இந்தியாவிற்காக ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்த ஆஸ்கர் நாயகன். ஆரம்பத்தில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்.

சினிமாவில் மணிரத்னம் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் அறிமுகமானார். மணிரத்தினத்தின் படமான ரோஜா தான் அவருக்கு முதல் படம். அந்த படத்தில் இவர் போட்ட பாட்டுகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

அதன்பின் இசையில் தனக்கென நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார் ஏ ஆர் ரகுமான். இப்பொழுது இவர் பணத்தை குறிக்கோளாய் கொண்டு இசை அமைப்பதில்லை. பெரும்பாலும் துபாயில் இருக்கும் இவர் இன்று வரை பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பொன்னியின் செல்வன், இரவின் நிழல் போன்ற படங்களில் பிஸியாக இருக்கும் இவர் சம்பளத்தை பற்றி ஒருநாளும் யோசித்தது கிடையாது. இவ்வளவுக்கும் பொன்னியின் செல்வன் படம் பெரும் பட்ஜெட்டில் உருவாகிக்கொண்டிருக்கும் படம். இரவின் நிழல் படமும் பார்த்திபன் ஆஸ்கர் விருதுக்காக செதுக்கிய படம்.

இந்த இரண்டு படங்களுக்கும் ஏ ஆர் ரகுமான் பழகிய பழக்கத்திற்காவும் , தனக்கு எந்த ஒரு இடைஞ்சலும் கொடுக்காமல் இஷ்டப்படி வேலை செய்யும் உரிமைக்காகவும் தான் கமிட்டாகி வேலை செய்து கொண்டிருக்கிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்